அஷ்வினி வைஷ்ணவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஷ்வினி வைஷ்ணவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2022

கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் ஒன்றாகும்.- அஷ்வினி வைஷ்ணவ்



நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் ஒன்றாகும். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு இணங்க, மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், இன்று மையப்படுத்தப்பட்ட வழி உரிமை அனுமதிகளுக்கான (www.sugamsanchar.gov.in) “விரைவு சக்தி சஞ்சார்” வலைதளத்தைத் தொடங்கியுள்ளார்.

சனி, 9 அக்டோபர், 2021

சர்வதேச தபால் தினத்தன்று உலகளாவிய அஞ்சல் சங்கம் மற்றும் அஞ்சல் குடும்பத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வாழ்த்தினார்.


 1874-ல் உலகளாவிய அஞ்சல் சங்கம் நிறுவப்பட்டதை குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்க்கை, வணிகங்கள், நாடுகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தபால் துறை ஆற்றும் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டின் உலக தபால் தினத்தின் கருப்பொருள் ‘புத்தாக்கத்திற்கு புதுமைகளை புகுத்து’ என்பது ஆகும். உலக தபால் தினமான இன்று, கொவிட் பெருந்தொற்றின் சவாலான காலங்களில் பொதுமக்களுக்கு சேவையாற்றிய அஞ்சல் துறை பணியாளர்களின் பெருமதிப்பு மிக்க பங்களிப்புகளை நாம் போற்றுகிறோம்.