ராம் சந்திர பிரசாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராம் சந்திர பிரசாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

நாட்டில் உள்ள எஃகு ஆலைகள், மொத்தம் 2,30,262 டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம்.- மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங்


 நாட்டில் உள்ள எஃகு ஆலைகள்,  கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, கடந்த ஜூலை 25ம் தேதி வரை மொத்தம் 2,30,262 டன்கள்  திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகித்தன என்று   மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2018-19ம் ஆண்டில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை எஃகு ஆலைகளின் திரவ ஆக்ஸிஜன் உ.ற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 2492-ஆக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில்  நாள் ஒன்றுக்கு 4102 ஆக அதிகரிக்கப்பட்டது.

செவ்வாய், 20 ஜூலை, 2021

கொவிட்டுக்கு எதிரான நாட்டின் போருக்கு வலுவூட்டும் வகையில், 1554 படுக்கைகளுடன் மிகப்பெரிய கொவிட் மருத்துவமனைகள் பொதுத்துறை எஃகு ஆலைகளால் நிறுவப்பட்டன.- மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத்


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

நாட்டின் எஃகு உற்பத்தி திறன் தற்சமயம் 143.91 மில்லியன் டன்களாக உள்ளது. 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய சுரங்கங்கள் அலுவலகத்தின் இந்திய தாதுக்கள் ஆண்டு புத்தகத்தின் படி, 254 செயல்படும் சுரங்கங்கள் 2018-19-ல் இருந்தன. இவற்றில் 35 பொதுத்துறையிலும், 219 தனியார் துறையிலும் இருந்தன.

2019-20-ம் ஆண்டில், எஃகு உற்பத்தி 102.62 மில்லியன் டன்களாகவும், நுகர்வு 100.17 மில்லியன் டன்களாகவும், ஏற்றுமதி 8.36 மில்லியன் டன்களாகவும், இறக்குமதி 6.77 மில்லியன் டன்களாகவும் இருந்தன.