வியாழன், 1 ஜூலை, 2021

டிஜிட்டல் இந்தியா என்றால் விரைவான லாபம், முழுமையான லாபம், டிஜிட்டல் இந்தியா என்றால் குறைந்த அரசாங்கம், அதிகபட்ச அரசாள்கை.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 ”டிஜிட்டல் இந்தியா” தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இன்று காணொளி கருத்தரங்கு மூலம் “டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.  மத்திய மின்னணுவியல் மற்றும் ஐடி அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் மற்றும் கல்வி இணையமைச்சர் திரு சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோரும் இந்த காணொளி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவ சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். டாக்டர் பிசி ராயின் நினைவாகக் கொண்டாடப்படும் இந்த தினம், நமது மருத்துவப் பணியாளர்களின் உயரிய கொள்கைகளைக் குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பெருந்தொற்றின் கடுமையான சவால்களின் போது சிறந்த சேவையை அளித்து வரும் மருத்துவர்களுக்கு 130 கோடி இந்தியர்களின் சார்பாக அவர் நன்றி தெரிவித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று அவர் உரையாற்றினார்.

கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.


 கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவர்கள் தினத்தையொட்டி, சென்னையில் குடியரசுத் துணைத்தலைவரை பிரபல சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர் ஜார்ஜி ஆப்ரகாம் சந்தித்து புத்தகம் ஒன்றை வழங்கினார். அப்போது, மேற்கண்ட கருத்துக்களை திரு.வெங்கையா நாயுடு எடுத்துரைத்தார். “எனது நோயாளிகள் எனது கடவுள் –  சிறுநீரகவியல் மருத்துவர் ஒருவரின் பயணம்” (“MY PATIENTS MY GOD- JOURNEY OF A KIDNEY DOCTOR”) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில் மருத்துவர், கல்வியாளர், ஆய்வாளர் என்ற முறையில் டாக்டர் ஆப்ரகாமின் 40 ஆண்டுகாலப் பயணம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பன்முக உத்தியை பின்பற்றி அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.


 பன்முக உத்தியை பின்பற்றி அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய சங்கம் ஏற்பாடு செய்த,  கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி சர்வதேச கூட்டமைப்பின் (IFCPC 2021)    இந்தாண்டு உலக கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘நீட்’டை விரட்ட ஒட்டுமொத்த தமிழினமும் கட்டாயம் மீண்டும் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.- வ. கெளதமன்


 'நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட  தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும். -  வ. கெளதமன்

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்து, விளிம்பு நிலை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஒன்றிய பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்க, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க ஒன்று திரண்டது போல, ‘நீட்’டை விரட்ட ஒட்டுமொத்த தமிழினமும் கட்டாயம் மீண்டும் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.