செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

புதுமைகள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சேவை வழங்கலில் உலகின் முன்னணி நாடுகளுக்கு தலைமையேற்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது.- நரேந்திர மோடி


 இ-ருபி எனும் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது டிஜிட்டல் கட்டணத்திற்கான பணமில்லா மற்றும் தொடர்பில்லா கருவியாகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நேரடி பலன் பரிவர்த்தனையை இன்னும் அதிக செயல்திறன் மிக்கதாக ஆக்குவதில் முக்கிய பங்காற்றவுள்ள இ-ருபி, டிஜிட்டல் ஆளுகை முறைக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று கூறினார். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் கசிவுகளற்ற விநியோகத்தில் அனைவருக்கும் இ-ருபி உதவும் என்றுஅவர் கூறினார். மக்களின் வாழ்வை தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் இந்தியா எவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாக இ-ருபி விளங்குவதாக அவர் கூறினார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டை குறிக்கும் அம்ருத் மகோத்சவத்தை நாடு கொண்டாடும் சமயத்தில் இந்த எதிர்காலத்தை மனதில் கொண்ட சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் 4 புதிய அறிவியல் மைய திட்டங்களுக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 கலாச்சார வளர்ச்சி அறிவியல் திட்டத்தின் கீழ் புதிய அறிவியல் மையங்கள் அமைக்க, 14 திட்டங்களை மத்திய கலாச்சார அமைச்சகத்தின்  அறிவியல் அருங்காட்சிய தேசிய கவுன்சில் மேற்கொள்கிறது என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்  திரு ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நாடு முழுவதும் அறிவியல் நகரங்கள் உட்பட  அறிவியல் அருங்காட்சியங்கள் மற்றும் அறிவியல் மையங்களை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் அறிவியல் அருங்காட்சியக தேசிய கவுன்சில் (NCSM) உருவாக்கியுள்ளது.

அறிவியல் அருங்காட்சியக தேசிய கவுன்சில் (NCSM)-ன் கீழ்,  நாட்டில்  தற்போது  25 அறிவியல் அருங்காட்சியங்கள் / அறிவியல் மையங்கள் உள்ளன.

(Swadesh Darshan) ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மேம்பாட்டிற்காக கண்டறியப்பட்டுள்ள 15 சுற்றுலா பிரிவுகளுள் பசுமை சுற்றுலாவும் வனவிலங்கு சுற்றுலாவும் அடங்கும்.- திரு ஜி கிஷன் ரெட்டி


 பசுமை சுற்றுலாவை வளர்ச்சிக்கான முக்கிய துறையாக சுற்றுலா அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

நிலையான வாழ்வாதாரங்களின் ஆதாரமாக விளங்கவும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும் நிலைத்தன்மை வாய்ந்த சுற்றுலாவுக்கு பிரம்மாண்டமான சாத்தியக்கூறுகள் இருப்பதை சுற்றுலா அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, பசுமை சுற்றுலாவில் கவனம் செலுத்தும் நிலைத்தன்மை வாய்ந்த சுற்றுலாவை உருவாக்குவதற்கான தேசிய கேந்திர வரைவு திட்டத்தை அமைச்சகம் வடிவமைத்தது.

நாட்டில் உள்ள எஃகு ஆலைகள், மொத்தம் 2,30,262 டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம்.- மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங்


 நாட்டில் உள்ள எஃகு ஆலைகள்,  கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, கடந்த ஜூலை 25ம் தேதி வரை மொத்தம் 2,30,262 டன்கள்  திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகித்தன என்று   மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2018-19ம் ஆண்டில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை எஃகு ஆலைகளின் திரவ ஆக்ஸிஜன் உ.ற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 2492-ஆக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில்  நாள் ஒன்றுக்கு 4102 ஆக அதிகரிக்கப்பட்டது.

பாரம்பரிய தொழில்நுட்பங்களால் இயலாத புதிய வாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்குகிறது.- பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா


 பாரம்பரிய தொழில்நுட்பங்களால் இயலாத புதிய வாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கி வருவதாகவும், மருத்துவத்துறையுடன், வெவ்வேறு துறைகளில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களுக்கு அது உபயோகமாக இருக்கக்கூடும் என்றும் அண்மையில் நடைபெற்ற தொடர் கருத்தரங்கங்களில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.