வெள்ளி, 29 நவம்பர், 2019

ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். - ஜி.கே.வாசன்


இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை அதிபரிடம் இந்திய பிரதமர் அவர்கள் இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உரிய உரிமைகள், பாதுகாப்புகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல், தடையில்லாமல் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டும்.

திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல சதி திட்டங்களை தீட்டி, குழப்பங்களை ஏற்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அனைவரும், திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர்
- மு.க.ஸ்டாலின் பேட்டி.
(தலைவர், திமுக )

உள்ளாட்சி மன்றத் தேர்தலை அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடத்தாமல், 'ஏதாவது சில காரணங்களைச் சொல்லி யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுவார்களா? - தடை பெற்று அதை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும்', என்கிற ஒரே நோக்கத்தோடு அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக ரத்து செய்க! - DR.S. ராமதாஸ்

பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்:
கட்டணத்தை முழுமையாக ரத்து செய்க!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை வரையிலான பகுதி சரியாக பராமரிக்கப்படாததற்காக கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்தச் சாலை சீரமைக்கப்படும் வரை 50% சுங்கக்கட்டணம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று ஏன் ஆணையிடக் கூடாது? என வினா எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது; இதன் மூலம் அச்சாலையை பயன்படுத்துவோரின் உள்ளக் குமுறல்களை நீதிபதிகள் எதிரொலித்துள்ளனர்.

வியாழன், 28 நவம்பர், 2019

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து
மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத்தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, தமிழகத்தின் நதிகள் இணைப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் விரிவான பதிலை மக்களவையில் இன்று 28 நவம்பர் 2019 அளித்துள்ளார்.

பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து மகாராஸ்டிராவில் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள் - ஜி.கே.வாசன்

பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ஆட்சி அமர்ந்திருக்கிறது. இதன் சிரத்தன்மை கேள்விக்குறியதாகவே இருக்கிறது. - ஜி.கே.வாசன்


மகாராஸ்டிர மாநில மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் கொள்கைகளை தாரை வார்த்து கொடுத்து பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து இன்றைக்கு மகாராஸ்டிராவில் பயனற்ற ஆட்சியை அமைத்திருக்கிறார்கள்.