டி.ஆர்.பாலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.ஆர்.பாலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

கொரோனா கொள்ளை நோய் தொற்றிலிருந்து தமிழகத்தை காத்திட காலதாமதமின்றி 10 கோடி தடுப்பூசிகளை அளித்திடுக. மத்திய அமைச்சருக்கு டி. ஆர். பாலு வேண்டுகோள்.


தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான திரு. டி. ஆர். பாலு 
அவர்கள், அன்று (23/05/2021) மாலை மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழகத்திற்கு, மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசிகளை தரவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

திரு. டி. ஆர். பாலு அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

வெள்ளி, 21 மே, 2021

தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்கவும் - செங்கல்பட்டு ஆலையில் ரூ.300 கோடி முதலீட்டில் தடுப்பூசிகள் தயாரிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் அவர்களிடம் திரு. T.R.பாலு MP கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்கவும் - செங்கல்பட்டு ஆலையில் ரூ.300 கோடி முதலீட்டில் தடுப்பூசிகள் தயாரிக்கவும், திமுக பொருளாளர் திரு. T.R.பாலு MP அவர்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் அவர்களிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம்:

கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகவேகமாக பரவிவரும் சவாலான நிலையில் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க. பல்வேறு பணிகளை அதிவேகத்துடன் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டத்தை தமிழக அரசு துவக்கி உள்ளது. ஆனால், இதற்காக மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் ஊசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது.

லட்சத்தீவு அருகில் காணாமல் போன நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களிடம் திரு. டி.ஆர்.பாலு MP கடிதம்

 லட்சத்தீவு அருகில் காணாமல் போன நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களிடம், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவருமான திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள் அளித்துள்ள கடித விவரம்:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி கடலோர பகுதியில் சமீபத்தில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர கோரி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை இன்று (21.5.21) கழக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

திங்கள், 23 நவம்பர், 2020

இந்தித்திணிப்பு - தமிழக வருவாய் பறிப்பு - மத துவேஷம் - இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்தது - விவசாயிகளை சீரழித்தது போன்ற அநீதிகளை தவிர 6 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன? - திரு. டி.ஆர்.பாலு MP


"இந்தித்திணிப்பு - தமிழக வருவாய் பறிப்பு - மத துவேஷம் - இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்தது - விவசாயிகளை சீரழித்தது போன்ற அநீதிகளை தவிர 6 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன?" - திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா-வுக்கு கேள்வி.

“மத்திய அரசில் இருந்த போது தி.மு.க. தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன?” என்று நேற்றைய தினம் அ.தி.மு.க.வின் கூட்டணி அறிவிப்பைக் கேட்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் கேட்டிருக்கிறார். அந்த சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால் - நேருக்கு நேர் மேடை அமைத்து - திரு. அமித்ஷா அவர்கள் கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திராவிட முன்னேற்றக் கழகத்தால் முடியும்.

வியாழன், 9 ஜூலை, 2020

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மீதான வழக்கை முடித்து - சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.- திரு. டி.ஆர்.பாலு MP


"உயர்நீதிமன்றத்தால் பிணை அளிக்கப்பட்டு -  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மீதான வழக்கை முடித்து - சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்”
 -  திரு. டி.ஆர்.பாலு MP 

தமிழகத்திற்கு 9 நாடுகளிலிருந்து வந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் பதினைந்து வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அதிமுக அரசு கைது செய்து- அவர்களை எல்லாம் மத்திய அரசு வகுத்துள்ள “தடுப்பு மற்றும் சிறப்பு முகாம்கள்” விதிகளுக்கு மாறான இடங்களில்- சுகாதார வசதி, உணவு வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நெருக்கடி மிகுந்த சிறார் இல்லங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். 

செவ்வாய், 16 ஜூன், 2020

"கொரோனா பேரிடரிலும் 'அரசியல்' செய்யும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்வது மக்களின் சாபக்கேடு" - திரு. டி.ஆர்.பாலு எம்.பி.,


“கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவதாக எங்கள் கழகத் தலைவர் கூறுவது முற்றிலும் தவறானது” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் கூறுவதற்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்பதைச் சற்று அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.

“டிரான்ஸ்பர்களுக்கு மாமூல் வாங்கி கவரில் பணத்தைப் போட்டு வைத்து விட்டு” மறைக்க ஆடும் நாடகம் போன்றது அல்ல இந்த கொடிய கொரோனா நோய்! மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது. தினமும் செத்துமடியும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் இவ்வளவு மரணங்களுக்குப் பிறகும் தெரிந்து கொள்ளவில்லை என்றால்- இவரைத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பெற்றது முதல் பாவம்!

அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் ஊழல் மயக்கத்தில் இருக்கிறார். மருந்து, மருத்துவ உபகரணங்கள், அதிவிரைவு பரிசோதனை கிட், நியமனங்கள் ஆகியவற்றில் அடித்த பணம் அவரது கண்ணை மறைக்கிறதா? அல்லது அடித்த கமிஷனில் இதுவரை செலுத்தி வரும் “கப்பம்” தன்னை காக்கும் என்று நினைக்கிறாரா?

வியாழன், 14 மே, 2020

திமுக எம்.பி.க்களுக்கு தலைமைச் செயலாளர் அவமரியாதை. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கடும் கண்டனம்


திமுக எம்.பி.க்களுக்கு தலைமைச் செயலாளர் அவமரியாதை. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கடும் கண்டனம்

இன்று (13.5.2020) மாலை 5.00 மணி அளவில் சென்னையை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் நானும் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்களின் ஒன்றிணைவோம் வா வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் சமர்ப்பித்த கொரோனா கொள்ளை நோய் நிவாரண மனுக்களை ஒப்படைக்கவும் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் சந்தித்தோம்.

நானும் திரு. தயாநிதி மாறன் அவர்களும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லால் முன்னாள் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்களாக பல்லாண்டுகள் பதவி வகித்தவர்கள் என்பதை சற்றும் கருத்தில் கொள்ளாமல் அதிர்ச்சியூட்டும் வகையில் மரியாதை குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் நடந்து கொண்டார். அதைப்போலவே உடன் சென்ற ஏனைய இரு நாடளுமன்ற உறுப்பினர்களையும் குறைந்த பட்ச வரவேற்பு முறைகளைக் கூட பின் பற்றாமல் அவமதித்துள்ளார்.

இருப்பினும் பாரளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அரசுக்கு உறுதுணையாகவும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நிவாரணம் வழங்கிடும் நோக்கோடு கழகத் தலைவர் அவர்களின் நேரடி பார்வையில் விளக்கியதோடு செயல்படுத்தப்படும் திட்டம் கீழ் பற்றி பெறப்பட்ட இத்திட்டத்தின் பல்லாயிரம் மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்ததோடு அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தோம்.

வியாழன், 2 ஜனவரி, 2020

சாமானிய மக்களை பாதிக்கும் ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் - டி.ஆர்.பாலு

”சாமானிய மக்களை பாதிக்கும் ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும்” - திரு. டி.ஆர்.பாலு எம்.பி.,
மத்திய அரசு யாரும் எதிர்பாராத நேரத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 28 நவம்பர், 2019

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து
மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத்தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, தமிழகத்தின் நதிகள் இணைப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் விரிவான பதிலை மக்களவையில் இன்று 28 நவம்பர் 2019 அளித்துள்ளார்.

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டி. ஆர். பாலு

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மக்களவையில் டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, மக்களவையில் கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மீனவர்களையும் பொதுமக்களையும் விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார்.

திங்கள், 30 செப்டம்பர், 2019

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - கால்வாய்கள் தூர்வாரப்பட்ட விவரங்கள் - டி.ஆர்.பாலு

"திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - கால்வாய்கள் தூர்வாரப்பட்ட விவரங்கள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி ஏரி குளங்களை தூர் வாரியது; தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசக்கூடாது"

- டி.ஆர்.பாலு அறிக்கை.
(திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர்)

முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு “எதைப் பேசுவது என்று தெரியாமல்- கூட்டிக் கொண்டுவந்து சேர்த்த கூட்டத்தில் எதையாவது பேசிக் கொண்டிருப்பதை”ப் பார்க்கும் போது, அவர் வேறு யாருக்கோ எதற்கோ பயந்து, ஏதோ ஒரு நடுக்கத்தில் முதலமைச்சர் பதவியை விடமுடியாமல் நீடித்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. நிரூபிக்கப்படாத- திட்டமிட்டு பொய்யாக, போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதற்காக, சூதான எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட ஒரு வீண் புகாரை மேற்கோள்காட்டி “வீராணம் ஊழல்” என்று கூறியிருக்கிறார். எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் கோடிட்டுக் காட்டிய வீராணம் திட்டத்தைத்தான், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றினார் என்ற அடிப்படை தகவலைக் கூடத் தெரிந்து கொண்டு பேசுவதற்கு முதலமைச்சர் தயாராக இல்லை என்பது வருத்தமளிக்கிறது.