வியாழன், 28 நவம்பர், 2019

பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து மகாராஸ்டிராவில் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள் - ஜி.கே.வாசன்

பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ஆட்சி அமர்ந்திருக்கிறது. இதன் சிரத்தன்மை கேள்விக்குறியதாகவே இருக்கிறது. - ஜி.கே.வாசன்


மகாராஸ்டிர மாநில மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் கொள்கைகளை தாரை வார்த்து கொடுத்து பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து இன்றைக்கு மகாராஸ்டிராவில் பயனற்ற ஆட்சியை அமைத்திருக்கிறார்கள்.


மகாராஸ்டிர மாநில வளர்ச்சிக்காக மக்கள் அளித்த வாக்குக்கு எதிராக இன்றைக்கு அமைந்திருக்கும் கூட்டணி ஆட்சி பரிசோதனை களமாக அமைந்திருப்பது வேதனையான ஒன்று. இதன் சிரத்தன்மை கேள்விக்குறியதாகவே  இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்திலே இன்று அமைய இருக்கும் சிவசேனா, தேசியவாதகாங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி முரண்பாடுகளின் மொத்த உருவம்.

முதல்வர் பதவிக்காக சிவசேனா கட்சி காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தங்களுடைய மொத்த வடிவத்தையும் இழந்திருக்கிறார்கள். மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்திற்காக ஆசைப்பட்டு தங்களுடைய கொள்கைகளை காத்தாடி போல பறக்கவிட்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் இந்திய அளவிலே சிறுபான்மை மக்களுடைய நம்பகத்தன்மையை இழந்திருக்கிறார்கள். அதே போல தேசியவாத காங்கிரஸ் கட்சி பா.ஜ.க வோடும் பேசி, சிவசேனா கட்சியோடும் பேசி தங்களுடைய பதவியை உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த ஆட்சி மகாராஸ்டிர மாநில மக்களால் விரும்பி வாக்களித்த கூட்டணி ஆட்சியும் அல்ல. சந்தர்ப்பவாத ஆட்சியாகவே அமைந்திருக்கிறது.

மாநில வளர்ச்சிக்காக மக்கள் அளித்த வாக்குக்கு எதிராக இன்றைக்கு அமைந்திருக்கும் கூட்டணி ஆட்சி பரிசோதனை களமாக அமைந்திருப்பது வேதனையான ஒன்று. குறிப்பாக மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் கொள்கைகளை தாரை வார்த்து கொடுத்து பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து இன்றைக்கு மகாராஸ்டிராவில் பயனற்ற ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளே ஆட்சியினுடைய நிலையற்ற தன்மையை விரைவில் நிரூபிக்கும்.

பா.ஜ.க எதிர்கட்சியாக தனிப் பெரும் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலில் அவர்களை நம்பி எடுத்த முடிவு ஏற்புடையதல்ல.

மொத்தத்தில் மகாராஸ்டிர மாநில மக்கள் வாக்களித்ததற்கு மாறாக இன்றைக்கு ஆட்சிக்கட்டிலில் ஒரு சந்தர்ப்பவாத, பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ஆட்சி அமர்ந்திருக்கிறது. இதன் சிரத்தன்மை கேள்விக்குறியதாகவே இருக்கிறது.

வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மகாராஸ்டிர மாநில மக்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் நன்மை நடக்க வேண்டும் என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக