வெள்ளி, 8 நவம்பர், 2019

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட ஆணை - எடப்பாடி கே.பழனிசாமி

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வேளாண்
பெருங்குடி மக்களிடமிருந்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக
தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன. 


வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி 11-க்கு 9.11.2019 முதல் 16.11.2019 வரை உள்ள 7 நாட்களுக்கு 1441 மில்லியன் கன அடி யும், வைகை பூர்வீக பாசனப்பகுதி II-க்கு 17.11.2019 முதல் 21.11.2019 வரை 4 நாட்களுக்கு 386 மில்லியன் கன அடியும், 22.11.2019 முதல் 25.11.2019 வரை மூன்று நாட்களுக்கு 48 முக.அடியும் பகுதியை - சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு, விரகனூர் மதகணையில் வழங்கவும் மற்றும் வைகை
பூர்வீகபாசனப்பகுதி 1-க்கு 26.11.2019 முதல் 2.12.2019 வரை  240 மில்லியன்
கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயி பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக