தமிழ் மாநில காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மாநில காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 டிசம்பர், 2021

பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழக அரசு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு அதிக அக்கறையோடு செயல்பட வேண்டும் மற்றும் பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ  முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும்.

ஒமிக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. 

அதே சமயம் பள்ளிகளில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டம், கூட்ட நெரிசல் காரணத்தால் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்காக வகுப்பறையில் தனி மனித இடைவெளியில் இறைவணக்கம் நடைபெற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். 

வியாழன், 11 நவம்பர், 2021

தமிழக விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.- ஜி.கே.வாசன்



தமிழக அரசு விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி கடைசி தேதி என்பதை மழைக்கால சிரமத்தை கவனத்தில் கொண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை பயிர்காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

ஞாயிறு, 7 நவம்பர், 2021

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் உரிமை பறிபோகிறது, விவசாயத்திற்கு பயனளிக்காது. - ஜி.கே.வாசன்


 தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முறையாக செயல்படாததை கண்டித்து பாஜக சார்பில் 8 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கும் மற்றும் அதிமுக சார்பில் 9 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கும் த.மா.கா தார்மீக ஆதரவு அளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் 9 ஆம் தேதி (09.11.2021) நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா  தார்மீக ஆதரவு அளிக்கிறது. 

அதே போல முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க சார்பில் 8 ஆம் தேதி (08.11.2021)) தேனியில் நடைபெறும் முற்றுகையிடும் போராட்டத்திற்கும் த.மா.கா தார்மீக ஆதரவு அளிக்கிறது. 

வியாழன், 28 அக்டோபர், 2021

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு 3 நேரமும் உணவு வழக்கம் போல கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழக அரசு - அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைப்பது, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வேலை நாட்களில் சுழற்சி முறையை கொண்டுவருவது ஆகியவற்றில் ஈடுபடாமல் தொடர்ந்து அம்மா உணவகங்கள் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது போல சிறப்பாக செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு 3 நேரமும் உணவு வழக்கம் போல கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மத்திய அரசு - காணமால் போன மீனவரை விரைவில் கண்டுபிடிக்கவும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்படவும், மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபடவும் மத்திய அரசின் நடவடிக்கை அவசரம், அவசியம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.

பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்துவதும், படகுகளை பறிமுதல் செய்வதும், மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும் நடைபெறுகிறது. 

புதன், 13 அக்டோபர், 2021

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை, ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. - ஜி.கே.வாசன்

 ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. - ஜி.கே.வாசன்

 நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கின்றன . தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் முடிவு வரை தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை . 

அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக ஜனநாயகம் தோல்வி அடைந்துதிருக்கிறது . தமிழக மக்களுக்கும் , இது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் , அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . 

புதன், 29 செப்டம்பர், 2021

நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்


நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறப்பது வரவேற்கதக்கது , 

கொரோனா தொற்றை முன்னிட்டு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தொடங்க வேண்டும் . நவம்பர் 4 - ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது . 

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்கு அதிக அளவில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் . 

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்வியில் அரசியலைப் புகுத்தி வாக்குவங்கிக்காக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்தவிதமான அவநம்பிக்கையையும் இனி எந்த அரசியல் கட்சியும் கொடுக்கக்கூடாது.- ஜி.கே.வாசன்


நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி  தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் உயிரை மாய்த்துக்கொண்டது வேதனைக்குரியது.

நாமக்கல்லில் தனியார் பள்ளியில் படித்த போது 10 ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்களை பெற்று அப்பள்ளியில் முதலிடத்தைப் பிடித்தார். மேலும் 12 ஆம் வகுப்பில் 600 – க்கு 562.28 மதிப்பெண்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய நிலையில் மதிப்பெண் சம்பந்தமாக பயந்த நிலையில் உயிரிழந்திருப்பதால் பெற்றோரும், அப்பகுதி மக்களும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திங்கள், 5 ஜூலை, 2021

ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்துவரும் மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்


 ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்துவரும் மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்

தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுக்கு இடையில் , தற்பொழுது தான் சிரிது சிரிதாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டு வருகிறது . 

வெள்ளி, 2 ஜூலை, 2021

தேசிய மருத்துவர்கள் தினத்தில் நோயில்லா உலகை உருவாக்க பாடுபடும் அவர்களின் வாழ்கை என்றென்றும் சிறக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

 நோயில்லா உலகை உருவாக்க பாடுபடும் மருத்துவர்களின் வாழ்கை என்றென்றும் சிறக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

வருடம் தோறும் ஜூலை 1 - ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது . 

டாக்டர் பி.சி. ராய் அவர்களின் சேவையை போற்றும் விதமாக அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது . 

வெள்ளி, 25 ஜூன், 2021

காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு .முருகேசன் என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதர்ச்சியயையும் , வருத்தத்தை ஏற்படுத்துகிறது . 

செவ்வாய், 22 ஜூன், 2021

மக்களின் வாழ்வாதாரத்தை காத்து அவர்களின் வாழ்கையை முன்னேற்ற என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் தெளிவுப்படுத்தவில்லை.- ஜி.கே.வாசன்


 தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய தினம் ஆளுநர் உரையில் தமிழக அரசு பல்வேறு துறைகளில் மக்களுக்கான வருங்கால திட்டங்களை விளக்கி இருக்கிறது . 

அதனை அரசு ஒரு காலகெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் . 

தற்பொழுது கொரோனா தொற்றால் நாடும் , நாட்டு மக்களும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர் . 

ஞாயிறு, 13 ஜூன், 2021

மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருக்கும் இந்நேரத்தில் மானியத்தில் வழங்கும் டீசல் அளவை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

 மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருக்கும் இந்நேரத்தில் மானியத்தில் வழங்கும் டீசல் அளவை  தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 14 - ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டது . இக்காலகட்டம் ஆழ்கடலில் மீன் இனப்பெருக்க காலம் என்பதால் கடலில் மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது . 

சனி, 5 ஜூன், 2021

கொரோனா தொற்றால் குழந்தைகளை விட்டுவிட்டு உயிரிழந்த பெற்றோர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்து இருந்தால் அவற்றை சட்டரீதியாக பாதுகாத்து உரிய காலத்தில் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 கொரோனா தொற்றால் குழந்தைகளை விட்டுவிட்டு உயிரிழந்த பெற்றோர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்து இருந்தால் அவற்றை சட்டரீதியாக பாதுகாத்து உரிய காலத்தில் அவர்களுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும்.

கொரோனா என்ற கொடிய நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பலர் மரணத்தை தழுவியுள்ளனர் . 

அப்படி மரணம் அடைந்தவர்கள் பெற்ற குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர்கள் இருவரும் மரணமடைந்து இருக்கிறார்கள் . அப்படி பெற்றோர்கள் இருவரையும் இழந்து தவிக் குழந்தைகளுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது . 

செவ்வாய், 1 ஜூன், 2021

பூஞ்சை நோய்களை அறிய கண்காணிப்பு குழுவை அமைத்து , பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


பூஞ்சை நோய்களை அறிய கண்காணிப்பு குழுவை அமைத்து , பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் கொரோனா தொற்று மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இரண்டாம் அலையில் நோய்தொற்று அதிக அளவில் இருப்பதைப் போல , இறப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கிறது . 

வியாழன், 27 மே, 2021

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி , பழங்களை அவரவர் இல்லங்கள் அருகே வழங்குவது போல் நியாயவிலை கடையின் மூலம் அத்தியாவசிய பொருள்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

 


நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி , பழங்களை அவரவர் இல்லங்கள் அருகே வழங்குவது போல் நியாயவிலை கடையின் மூலம் அத்தியாவசிய பொருள்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி , பழங்கள் போன்றவை அவரவர் இல்லங்கள் அருகேயே 10 பொருள்கள் அடங்கிய காய்கறி தொகுப்பாக விற்பனை செய்யப்படுகிறது . 

புதன், 19 மே, 2021

பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமம் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


கிராமங்கள் முதல் சிறு நகரங்கள் வரை பெரிய மாவட்டத்திற்கு கரோனா சிகிச்சைக்காக தனியார் மற்றும் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், மருந்துகள், வெண்டிலேட்டர்களை தமிழக அரசு கண்காணித்து தேவையறிந்து அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற மேற்கு வங்கத்தில் இருந்தும், ஓடிசா மாநிலத்தில் இருந்தும், ஆக்சிஜன் ரயில் மூலம் வந்து இருக்கிறது. 

சனி, 12 டிசம்பர், 2020

தமிழகத்தில் 100 சதவீதப் பயணிகள் பேருந்துப் போக்குவரத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழகத்தில் 100 சதவீதப் பயணிகள் பேருந்துப் போக்குவரத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன் 

"கரோனா தொற்றின் காரணமாக போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், கரோனா தொற்று குறைந்து வரும் இவ்வேளையில் தற்போது பல்வேறு தளர்வுகளுக்கு இடையில் சாலைப் போக்குவரத்து முழு அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து மட்டும் இன்னும் இயல்பு நிலைக்கு அனுமதிக்கப்படவில்லை.

புதன், 9 டிசம்பர், 2020

இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலே, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, அச்சத்தைப் போக்கி, மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


பாரத் பந்த் போராட்டம்; அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் ஆதரவு 

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. மத்திய அரசு விவசாயப் பிரதிநிதிகளோடு ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

தமிழகத்தை தாக்கிய நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு உடனடியாக பெற்று தர வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழகத்தை தாக்கிய நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு உடனடியாக பெற்று தர வேண்டும்.