செவ்வாய், 22 ஜூன், 2021

மக்களின் வாழ்வாதாரத்தை காத்து அவர்களின் வாழ்கையை முன்னேற்ற என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் தெளிவுப்படுத்தவில்லை.- ஜி.கே.வாசன்


 தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய தினம் ஆளுநர் உரையில் தமிழக அரசு பல்வேறு துறைகளில் மக்களுக்கான வருங்கால திட்டங்களை விளக்கி இருக்கிறது . 

அதனை அரசு ஒரு காலகெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் . 

தற்பொழுது கொரோனா தொற்றால் நாடும் , நாட்டு மக்களும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர் . 

இந்த இழப்பை எப்படி சரிகட்டுவது , நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது எப்படி , மக்களின் வாழ்வாதாரத்தை காத்து அவர்களின் வாழ்கையை முன்னேற்ற என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் தெளிவுப்படுத்தவில்லை . 

கொரோனாவிற்கு பிறகு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் , தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கவேண்டும் என்று த.மா.கா வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக