புதன், 30 ஜூன், 2021

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக நேரடி முகவர்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு


 சென்னை மத்திய கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் dopliccc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்னை குறிப்பிட்டு, கல்வி சான்றிதழ், வயது மற்றும் முகவரி சான்றுகளின் நகல்களை இணைத்து,  வருகின்ற 10.07.2021ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்பவும்.

தேவையான தகுதிகள்:

அ. கல்வி தகுதி:  குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆ: வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

இ: பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  விண்ணப்பிக்கலாம்.

ஈ: விரும்பத்தக்க தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

     இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

      மேற்கண்ட தகுதியுடையவர்களை, நேரடி அல்லது நிகழ்நிலை மூலம் அப்போதைய சுழ்நிலையைப் பொறுத்து நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் [NSC] அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை [KVP] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் திரு மு. ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக