நோயில்லா உலகை உருவாக்க பாடுபடும் மருத்துவர்களின் வாழ்கை என்றென்றும் சிறக்க வேண்டும். - ஜி.கே.வாசன்
வருடம் தோறும் ஜூலை 1 - ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது .
டாக்டர் பி.சி. ராய் அவர்களின் சேவையை போற்றும் விதமாக அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது .
உலகையை அச்சுறுத்திகொண்டு இருக்கும் கொரோனாவின் தாக்கத்தால் லட்சக்கணக்காண மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் , தன்னுடைய உயிரையும் , குடும்பத்தையும் , பொருட்படுத்தாமல் , தன்னலமில்லாமல் பொதுநலத்தோடு மக்களின் உயிரை காப்பாற்றும் உண்ணதப் பணியில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவர்களின் தொடர் பணி போற்றுதலுக்குரியது . பாராட்டுக்குரியது .
உலகில் கடவுளுக்கு இணையாக மருத்துவர்களை கூறுவார்கள் .
அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் மக்களால் மதிக்க கூடிய மருத்துவர்களை இந்நன்னாலில் அவர்களின் அர்பணிப்பையும் , தியாகங்களையும் , போற்றுவோம் , பாராட்டுவோம் .
தேசிய மருத்துவர்கள் தினத்தில் நோயில்லா உலகை உருவாக்க பாடுபடும் அவர்களின் வாழ்கை என்றென்றும் சிறக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக