நோய் கட்டுப்பாடு தேசிய மையத்தின் 112வது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவாருடன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணுயிர் எதிர்ப்புக்கான(AMR) முழு மரபணு வரிசைமுறை தேசிய குறிப்பு ஆய்வகம் மற்றும் புதிய உயிர்பாதுகாப்பு நிலை (BSL) 3 ஆய்வகம், முதுநிலை மாணவர்கள் விடுதி மற்றும் விருந்தினர் இல்லத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வக வளாகத்தில், 5 தளங்கள் மற்றும் 22 பிஎஸ்எல்-2 ஆய்வகங்கள் உள்ளன.
பருவநிலை மாற்றத்துக்கான தேசிய திட்டத்தின் கீழ், காற்று மாசு மற்றும் வெப்பம் ஆகியவற்றுக்கான தேசிய சுகாதார தழுவல் திட்டங்களையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மக்களுக்கான பல சேவைகளை தனது ஆய்வகங்கள் மூலம் ஏராளமான சேவைகளை நோய் கட்டுப்பாடு தேசிய மையம் வழங்குகிறது மற்றும் தொற்றுநோயியல், பொது சுகாதார திறன் மேம்பாடு, பூச்சியியல் போன்றவற்றில் பலப்படுத்துகிறது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறினார். ‘‘நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்புக்கான கட்டுப்பாட்டுத் திட்டத்தை வழிநடத்துவதில், நோய்கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் பங்கு பாராட்டத்தக்கது’’ என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக