வீணாகும் நெல் மூட்டைகள்: கொள்முதல்
நிலையங்களை உடனே திறக்க வேண்டும்! - DR அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் நேற்று தொடங்கி விட்ட நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து வரும் நிலையில், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது நியாயமல்ல.



