சனி, 3 அக்டோபர், 2020

வீணாகும் நெல் மூட்டைகள்: கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்! தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும். - DR அன்புமணி ராமதாஸ்


 வீணாகும் நெல் மூட்டைகள்: கொள்முதல் 

நிலையங்களை உடனே திறக்க வேண்டும்! - DR அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் நேற்று தொடங்கி விட்ட நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால், விவசாயிகள்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து வரும் நிலையில், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது நியாயமல்ல.

தேவேந்திரகுல வேளாளர் - பட்டியல் வெளியேற்றம், புதிய தமிழகம் கட்சி சார்பாக 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் குறித்து டிஜிபி அவர்களுக்கு தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் கடிதம் !!


தேவேந்திரகுல வேளாளர் - பட்டியல் வெளியேற்றம் ! 

புதிய தமிழகம் கட்சி சார்பாக 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் !!

 டிஜிபி அவர்களுக்கு தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் கடிதம் !!

கரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 11 ஆம் தேதி தியாகி இமானுவேல் தேவேந்திரனார் நினைவு தினத்தன்று பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்து, அந்தந்த கிராமங்களிலேயே தியாகி இமானுவேல் தேவேந்திரனார் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். எவ்வித இடையூறுமின்றி அஞ்சலி செலுத்தக் கூடிய நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.  அந்நிகழ்ச்சியை அமைதியாக நடத்திட பூரண ஒத்துழைப்பு தந்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால்; மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. - மு.க.ஸ்டாலின்


"விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரையில் போராட்டங்கள் ஓயாது; அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும்"
 -  மு.க.ஸ்டாலின்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால்; மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. இருவரும் சேர்ந்து வஞ்சிப்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். அவர் தன்னை ‘ஏழைத் தாயின் மகன்’ என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத்தாயின் மகன்.

தேவேந்திரகுல வேளாளர் - பட்டியல் வெளியேற்றப் போராளிகளே அக்டோபர் 6ம் தேதிக்கு, வீறு கொண்டு எழுந்து பணியாற்றுங்கள்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


தேவேந்திரகுல வேளாளர் -  பட்டியல் வெளியேற்றப் போராளிகளே அக்டோபர் 6ம் தேதிக்கு, வீறு கொண்டு எழுந்து பணியாற்றுங்கள்! 
- டாக்டர் K. கிருஷ்ணசாமி

நம்முடைய போராட்டங்களின் அடுத்த மைல்கல் - அக்டோபர் 6-ம் தேதி உண்ணாவிரதம் மிக அருகாமையில் இருக்கிறது. இன்று செப்டம்பர் 29. இன்னும் 6 தினங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி வந்துவிடும். மாநில அளவில் ஒரு இடம், மாவட்டத்திற்கு ஒரு இடம், வட்டத்திற்கு ஒரு இடம் என்பதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு கிராமம்/நகரம்/பேரூராட்சி என தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழக்கூடிய அனைத்து இடங்களிலும் உண்ணாவிரதம் நடத்தப்போகிறோம். ஒன்றல்ல, பத்தல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, 10,000 இடங்களில். தமிழக அளவில், இந்திய அளவில் வேறு எந்த அரசியல் கட்சியும் இவ்வளவு இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கு ஒரு துணிச்சலான முடிவு எடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், புதிய தமிழகம் கட்சி நடத்த இருக்கிறது. 10,000 என்பது 10,100 இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, 9999 ஆக இருக்கக்கூடாது. 

லட்சோப லட்சம் சுகன்யாக்கள் உருவாக வேண்டும்; அதுவே ஊமை சனங்களை உயர்த்தும்! - Dr.S.ராமதாஸ்


லட்சோப லட்சம் சுகன்யாக்கள்  உருவாக 
வேண்டும்; அதுவே ஊமை சனங்களை உயர்த்தும்!- Dr.S.ராமதாஸ்

சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த இ.பழனிச்சாமியின் மகள்  ப.சுகன்யா  இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான  தில்லி எய்ம்ஸ்சில் மூத்த மருத்துவராக  தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் இணைந்துள்ளார்.  கடும் போட்டி நிறைந்த தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓரிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.  நாடு முழுவதிலும் இருந்து  ஏராளமானோர் பங்கேற்ற தேர்வில் அந்த இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் சுகன்யா. இந்த செய்தியைக் கேட்பதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும். மருத்துவர் சுகன்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.