சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்வு ஏழைகளை பாதிக்கும்: மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.




