வெள்ளி, 2 ஜூலை, 2021

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்! - தொல்.திருமாவளவன்.

 பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை! உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி!

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்!

தமிழ்நாடு அரசுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை!  

- தொல்.திருமாவளவன்.

மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிர மாநில அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 610.50 ஆக இருந்தது ரூ.240 விலை உயர்வு செய்யப்பட்டு, தற்போது ரூ.850 க்கு விற்கப்படுகிறது. - கே.எஸ்.அழகிரி


 கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவினாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ரூ.25, பிப்ரவரி 15இல் ரூ 50, பிப்ரவரி 25இல் ரூ.25, மார்ச் 2இல் ரூ.25, ஜூலை 1இல் ரூ.25 என படிப்படியாக கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 32 முறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 610.50 ஆக இருந்தது ரூ.240 விலை உயர்வு செய்யப்பட்டு, தற்போது ரூ.850 க்கு விற்கப்படுகிறது. ஆனால், சேலத்தில் ஒரு சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84 உயர்த்தப்பட்டு ரூ.1687.50 ஆக விற்கப்படுகிறது.

வியட்நாம் தேசிய பாதுகாப்பு அமைச்சர் மூத்த லெப்டினன்ட் ஜெனரல் பான் வான் கியாங்குடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அன்று காணொலி மூலம் உரையாடினார்.


 வியட்நாம் தேசிய பாதுகாப்பு அமைச்சர் மூத்த லெப்டினன்ட் ஜெனரல் பான் வான் கியாங்குடன்  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 ஜூலை 1 அன்று காணொலி மூலம் உரையாடினார்.

தற்போதைய நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த இரு அமைச்சர்களும், இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு இடையேயான செயல்பாடுகளை மேலும் அதிகப்படுத்த உறுதி எடுத்துக்கொண்டனர். இந்திய-வியட்நாம் விரிவான யுக்தி சார்ந்த கூட்டு (2016)-ன் செயல்திட்டத்தின் படியும், அமைதி, வளம் மற்றும் மக்களுக்கான கூட்டுக் கொள்கையின் வழிகாட்டுதலின்  கீழும் இவை செயல்படுத்தப்படும். இரு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையே 2020 டிசம்பரில் நடைபெற்ற காணொலி உச்சி மாநாட்டில் இந்த கொள்கை கையெழுத்திடப்பட்டது.

வியாழன், 1 ஜூலை, 2021

நமது சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்கும் வாய்ப்பை கொவிட் தொற்று வழங்கியுள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 உத்தரப்பிரதேசம் பஸ்தியில் உள்ள ஒபக் காய்லி மருத்துவமனைக்கு, திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயணங்கள் நிறுவனம்(FACT) வழங்கிய பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலையை, ரசாயணம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95,000 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். - மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்


 பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95,000 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர் என பயிர் காப்பீடு வார துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக பயிர் காப்பீடு வாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்காக விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: