சனி, 26 ஜனவரி, 2019

அரசு ஊழியர்கள் போராட்டம் வேதனை அளிக்கிறது - எடப்பாடி கே.பழனிசாமி



மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு 100 ரூபாய் வருவாய் வந்தால் 75 ரூபாய் சம்பளத்திற்கே செலவாகிவிடுவதாகவும் கஜா புயல் பாதிப்புக்கு நிதி ஒதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டார். அவர்கள் அதிக சம்பளமும் சலுகையும் பெறும் அரசு ஊழியர்கள் நாட்டின் நிலை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும். இளைய தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக