வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை பதிலடி


தமிழகத்தில் சுட்டுப்போட்டாலும் தாமரை மலராது என்ற ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் தெரிவிக்கையில், "சுட்டு போட்டால் தாமரை மலராது. மக்கள் ஓட்டு போட்டால் தான் தாமரை மலரும்" எனக் கூறினார். 

கிராமசபைக்கூட்டம் பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்! ஒற்றையாக அமர்ந்து ஓரங்கநாடகம்? வரும்காலத்தில் ஓரங்கட்டப்படுவோம்? என்பதன் அறிகுறி? 5 முறை ஆண்ட திமுக! ஊழல் ஆட்சி! குடும்ப ஆட்சி! மறக்கமுடியுமா? உரக்கச்சொல்வோம்! ஏமாற்றவருகிறார்கள்! ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம் ! வெல்வோம்!

தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஒருநாளும் இறங்காது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தான் இந்த இட ஒதுக்கீடு. இதனை காங்கிரஸ் தலைவர்களும், பினராய் விஜயன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக