வெள்ளி, 11 ஜனவரி, 2019

செல்போன் செயலிகள் மூலம் பணம் திருட்டு


   நம் கையில் உள்ள செல்போனில் நமக்கான எல்லா வசதியும் கிடைக்கிறது. பல வசதிகளுடன் செல்போன் செயலிகள் இருப்பது போல், பணமில்லா பரிவர்த்தனைகளுக்காகவும் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் சுலபமாக பரிவர்த்தனை செய்துவிட முடிகிறது. 

ஆனால் மற்ற செயலிகளில் சில சலுகைகளும், வசதிகளும் இருப்பதால் அவற்றை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறனர். இந்த செயலி மூலம் உங்களது வங்கி பணத்தை திருட மோசடி கும்பலுக்கு டெபிட் கார்டின் 16 இலக்க எண்ணில் கடைசி 4 எண்ணை தெரிந்து கொண்டாலோ அல்லது காலாவதியாகும் தேதி, மாதம் தெரிந்திருந்தாலோ போதுமானது.

உங்களது வங்கி கணக்கிற்குள் நுழையும் மோசடி கும்பல் உங்களது செல்போன் எண்ணை நீக்கிவிட்டு அவர்களது செல்போன் எண் மூலம் ஓடிபி (OTP) பெற்று இருக்கும் பணத்தை மொத்தமாக சுருட்டி விடுவார்கள்.

வங்கி பணத்தை நூதன முறையில் திருட கடை விரித்து அமர்ந்திருக்கும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக