வெள்ளி, 12 ஏப்ரல், 2019

5 ஆண்டு சாதனையை கூற முடியாத பாஜக - யெச்சூரி


மதுரை, ஏப்.10- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:-நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைத் தேர்தல் முன்பு நடைபெற்ற தேர்தல்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல விசேஷமானதும் ஆகும்.இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக நீடிக்க வேண்டும். மதச்சார்பின்மை தொடரவேண்டும் என்பதற்கான தேர்தல். ஆட்சிப்பொறுப்பிலுள்ள பாஜக அரசியல் சட்டம் மீது விசுவாசமில்லாதது. அரசியல் சட்டத்தைசிதைத்தது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். மதுரையின் பாரம்பரியம் மிக்க மீனாட்சி யம்மன் நகரில் மக்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஒரு மக்கள் போராளி, சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எங்களோடு இணைந்து பணியாற்ற தில்லிக்கு அனுப்பிவையுங்கள். 5 ஆண்டு சாதனையை கூற முடியாத பாஜக மீண்டும் வெற்று வாக்குறுதிகளோடு வருகிறது: யெச்சூரி சாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக