செவ்வாய், 9 ஏப்ரல், 2019

இந்த நாடு சிரிப்பாய் சிரிக்கிறது - கரு. பழனியப்பன்


தமிழன் பெருமையை தமிழ்நாட்டில் பேச முடியவில்லை. திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தான் அடுத்த தலைமுறை வாழும். இல்லையெனில் எல்லாம் டிரவுர் கார்கள் தான் ஆள்வார்கள். நம்மை பார்த்து ஆண்டி இண்டியன் என்கிறார்கள். உண்மையிலேயே நாங்கள் தான் இண்டியன். அவங்க தான் ஆண்டி இண்டியன். மோடி எடப்பாடி ஆட்சியை பார்த்து இந்த நாடு சிரிப்பாய் சிரிக்கிறது. எல்லாம் மேல் இருப்பவர் (மோடி) பார்த்துக்கொள்வார் என்று இருக்கிறார். மேல இருப்பவரை கீழே இறக்கினால்;, கீழே இருப்பவர் இன்னும் கீழே போய்விடுவார்.
நான் இந்து, கிறிஸ்துவன், முஸ்லீம் என்ற வேறு பாடு பார்ப்பதில்லை என்று இப்போது மோடி பேசுகிறார். தேர்தல் வந்தால் ஓட்டு வாங்க இவர்கள் எந்த நிலைக்கும் போவார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியார், அண்ணா படத்தை போட்டு இப்போது இந்துத்துவா வாதிகள் ஓட்டு கேட்கிறார்கள். பாஜக காரனோட அதிமுக காரன் பள்ளிவாசல் பக்கம் ஓட்டு கேட்க போனால் விரட்டாமல் என்ன செய்வார்கள். மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் தயாராக உள்ளார்கள்.
5 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமராக பொறுப்பேற்ற போது நாடாளுமன்ற படிக்கட்டுக்களை தொட்டு கும்பிட்டார். ஆனால் நாடாளுமன்ற கூட்டங்களில் அவர் பங்கேற்றது குறைவான நாட்களே. வாஜ்பாயை ரைட் பெர்சன் இன் ராங் பார்ட்டி என்றார்கள். அவர் ராங் பெர்சனாக இருந்ததால் தான் ராங் பார்ட்டியில் இருந்தார் என்று ஏன் புரியாத மடையர்களாக இருக்கிறார்கள்.
மோடி ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா என்றார்கள். மேக் இன் இண்டியா என்றார்கள். டிஜிட்டல் இந்தியா என்றார்கள். எந்த இந்தியாவையும் காணவில்லை. எனவே புதிய இந்தியாவை காண வெங்கடேசனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கரு பழனியப்பன் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக