புதன், 10 ஏப்ரல், 2019

" NO MORE MODI " கோசமிடவேண்டும் - நடிகர் பூ ராமு

நோ மோர் மோடி !!!
நோ மோர் மோடி !!!
நோ மோர் மோடி !!!
என்று கோசமிடவேண்டும் ...
நடிகர் பூ ராமு 


ரூபாய் 15 லட்சத்தை நம் வங்கியில் காவலாளி போடுவார் என்று மக்கள் நமபிக்கொண்டிருக்கிறார்கள். சென்ற முறை வளர்ச்சி என்றார்கள். இந்த முறை பாதுகாப்பு என்கிறார்கள். மோடியை பொறுத்தவரை தேசம் என்பது எல்லாம் நாட்டின் எல்லை கோடு தான். நம்மை பொறுத்தவரை தேசம் என்பது இந்த மண்ணும் மக்களும் தான்.
பணமதிபிழப்பு நடவடிக்கையில் நான் உட்பட நம் பணத்தை எடுக்க முடியவிலலை. நான் உட்பட நாம் அனைவரும் அந்த நேரத்தில் பிச்சை எடுத்தோம். ரபேல் புத்தகத்தை ஒரு ஆயிரம் பேர் தான் வாங்கியிருப்பார்கள். ஆனால் தேர்தல் கமிசன் நடவடிக்கையால் இன்றைக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் விற்று தீர்ந்துள்ளன. இந்த தேசத்தை ஆர்.எஸ்.எஸ். கூட்டம் துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. அதை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த போது ஊழலை ஒழிப்போம் என்றார், கருப்புப்பணத்தை ஒழிப்போம் என்றார், தீவிரவாரதத்தை ஒழிப்போம் என்றார். இந்த 3ம் ஒழிந்திருக்கிறதா?
மோடியின் பெயரில் பனியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. பார்ப்பனீயத்திற்கு எதிராக அன்றைக்கு பேசிய முதல் ஆண்டி இண்டியன் பெரியார் தான். கோ பேக் மோடி என்று முன்பு கூறினோம். இப்போது நோ மோர் மோடி என்று கோசமிடவேண்டும் என்று நடிகர் பூ ராமு பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக