புதன், 2 செப்டம்பர், 2020

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கண்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்


 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கண்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் , தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் , சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது . 

இப்பொழுதுதான் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்புகின்ற இந்த சூழ்நிலையில் , இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு பொது மக்களை மிகவும் பாதிக்கும் . 

ஊரடங்கினால் வேலையின்மையும் , பொருளாதார இழப்பும் ஏற்பட்டு , மக்கள் அவதியுறும் நிலையில் நெடுஞ்சாலைத் துறை சுங்க கட்டணம் உயர்த்தியதால் , சரக்கு வாகனங்களின் கட்டணம் உயரும் , அதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் , இதனால் மேலும் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் . 

பெட்ரோலியம் துறை வேறு தினம்தோறும் சிறுக சிறுக பெட்ரோல் , டீசல் விலையை ஏற்றிக்கொண்டு உள்ளது . இதனாலும் விலைவாசி மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது . 

எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொது மக்களின் நலன் கருதி , சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து , உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக