சனி, 14 மே, 2022

வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். - குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு


 நீண்ட காலத்திற்கு விவசாய உற்பத்தியில் கணிசமான லாபத்தை அடைய, நாட்டில் விவசாய ஆராய்ச்சியின் தரம் மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர்  திரு. எம். வெங்கையா நாயுடு  அழைப்பு விடுத்துள்ளார். விரிவாக்க நடவடிக்கைகள் இல்லாமல் எந்த ஒரு முன்னேறிய நாடும் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட, திரு நாயுடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினத்தை அதிகரிக்க பரிந்துரைத்தார். இது நமது விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.

 ‘விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ற, லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மாற்ற வேண்டும் எனக் கூறிய திரு நாயுடு,  ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விவசாய ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் அழைப்பு விடுத்தார்.

ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின், வேளாண் ஆராய்ச்சி மேலாண்மைக்கான தேசிய அகாடமி-யின் வேளாண் வணிக மேலாண்மை திட்டத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் இயக்குநர் பதக்கங்களையும் திரு நாயுடு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நாயுடு, விவசாயப் பல்கலைக்கழகங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான உற்பத்தி முறைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கடைசி விவசாயிக்கும் இந்த முன்னேற்றங்களை எடுத்துச் செல்வதை தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தினார். கிராமங்களுக்குச் சென்று உண்மையான விவசாயப் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ‘உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆராய்ச்சி பலன்களை கொண்டு வர பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘பரிசோதனைக்கூடத்திலிருந்து நிலத்துக்கு ’ என்ற முழக்கத்தை நாம் உள்வாங்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.

இதைப் பற்றி விரிவாகக் கூறிய திரு நாயுடு, விவசாயிகளுக்கான விரிவாக்க நடவடிக்கைகளை 'அதிக தொழில்நுட்ப வாசகங்களைப் பயன்படுத்தாமல், எளிய மொழியில்' பிரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். மொபைல் அடிப்படையிலான விரிவாக்க  சேவைகளை ஆராய்ந்து, 'அனைத்து சேவைகளுக்கும், தேவைக்கேற்ப, எந்த குழப்பமும் இல்லாமல் ஒரே இடத்தில் தீர்வுகளை' வழங்கவும் அவர் பரிந்துரைத்தார்.

இந்திய விவசாயத்தின் பல்வேறு சவால்களான நீர் கிடைப்பதை குறைத்தல், பருவநிலை மாற்றம், மண் சீரழிவு, பல்லுயிர் இழப்பு, புதிய பூச்சிகள் மற்றும் நோய்கள், பண்ணைகள் துண்டு துண்டாக மாறுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை குடியரசு துணைத் தலைவர் விளக்கினார்.

இந்த சவால்களைச் சமாளிக்க, ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வெளிக்கொண்டு வரவும், அளவிடக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கவும் அவர் ஐசிஏஆர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை விவசாயத்தில் திறமையான மனிதவளத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு நாயுடு, பயிற்சி பெற்ற விவசாய-வணிக பட்டதாரிகள் விவசாயத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதற்கும் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக