திங்கள், 22 நவம்பர், 2021

அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி



அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி

சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - ‘‘நீராரும் கடலுடுத்த’’ என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர்.
வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. 

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆற்றிய உரை


 கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆற்றிய உரை 

கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முதலில், சத்தியஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் திரு.இஸ்த்வான் ஸ்சாபோ (Istvan Szabo) மற்றும் திரு. மார்ட்டின் ஸ்கோர்ஸ்செஸ் (Martin Scorsese) ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகிற்கு நீங்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

ஞாயிறு, 21 நவம்பர், 2021

பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், சமையற்கலை மற்றும் கலாச்சார பாராம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்டம்


 பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள கடந்த 15ம் தேதி தொடங்கின. இது நாடு முழுவதும் பழங்குடியினரின் கலாச்சாரங்களை எடுத்துக் காட்டுகிறது. 

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒருபகுதியாக, பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர் பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15ம் தேதி, பழங்குடியினர் கவுரவ தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படவுள்ளது. 

7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 26 மாவட்டங்களில் புதிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் திறக்கப்படும்.- திரு.நரேந்திர மோடி


 விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, “ஜன் ஜாத்தியா கவுரவ் திவாஸ்”-ஐ முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி, 15 நவம்பர் 2021 அன்று போபாலிலிருந்து காணொலி வாயிலாக 50 பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, ஏகலைவா பள்ளிகள் கட்டுமானப் பணி பெரும் ஊக்கம் பெற்றுள்ளது. இந்தப் பள்ளிகள் 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 26 மாவட்டங்களில் திறக்கப்பட உள்ளது.

பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிப்பதுடன், ஒட்டு மொத்த வளர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் காதி அரங்கை மத்திய அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி பார்வையிட்டார்


 புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2021-ல் காதி இந்தியா அரங்கை மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி சனிக்கிழமையன்று பார்வையிட்டார்.

காதி இந்தியா அரங்கை பார்வையிட்ட இணை அமைச்சர், அங்கிருந்த ராட்டையில் நூல் நூற்றார். மின்சார சக்கரத்தில் களிமண் பானைகள் செய்தல், கையால் காகிதம் செய்தல், கையால் செய்யப்பட்ட காலணிகள், எண்ணெய் உற்பத்தி உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.