திங்கள், 20 மே, 2019

தேர்தல் ஆணையத்தை கலைக்கும் சட்டவழிமுறையை யோசிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

தேர்தல் ஆணையத்தை கலைக்கும் சட்டவழிமுறையை யோசிக்க வேண்டும்
- கே.பாலகிருஷ்ணன் ( CPIM )


தேர்தல் ஆணையர் அசோக் லவாசா என்பவர் தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்துள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையைத் தவறிவிட்டது. ஆளும் கட்சி சார்ந்து செயல்படுகின்றது என்று எதிர்க் கட்சிகள் மட்டும் தான் விமர்சனம் செய்துவந்தோம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையரே பகிரங்கமாகப் புகார் சொல்லியிருப்பது மோடி அரசு அரசியல் சட்டத்திற்குட்பட்ட பல நிறுவனங்களை சீர் குலைத்திருப்பதின் இறுதி உதாரணமாகும். சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைத்ததுபோல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டையும் மோடி அரசு முடமாக்கியுள்ளது கண்டனத்திற்குரியது.

மோடி, அமித்ஷா ஆகியோர் வரம்பு மீறிப் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டத்திற்குரியது.

இத்தகைய ஆணையத்தின் பிடியில் தேர்தல் நடந்திருப்பது அச்சத்தையும் பல்வேறு ஐயப்பாடுகளையும் எழுப்புகிறது. இந்த ஆணையத்தைக் கலைப்பதற்கு சட்டரீதியான வழிமுறைகள் இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். மக்களவைக்கு நடைபெற்ற ஏழுகட்ட வாக்குப் பதிவுகளைப் பார்க்கின்ற போது மோடியின் வரம்பு மீறிய பேச்சு, அமித்ஷாவின் வரம்பு மீறிய செயல்பாடுகள் ஆகியவற்றை மீறி மக்கள் விரோத பாஜக ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்குப்பதிவைச் செய்திருப்பதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு நாடு முழுவதும் மகத்தான வெற்றி கிடைக்கும் எனச் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.ஆட்சி மாற்றம் தமிழகத்தில் இறுதிக் கட்டமாக நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏராளமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதற்கு எந்த வரைமுறையும் கிடையாது போலும்.

மத்திய தேர்தல் ஆணையம் எப்படி வரம்பு மீறிச் செயல்படுகின்றதோ அதேபோன்று மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி செயல்படுகிறார். பண விநியோகத்தையும் மீறி தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெறும். 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். மே 23 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்கள் அகதிகள் போல் வாழ்கின்றனர்

செங்கல்பட்டு, மே 19-தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை யாரிடம் தெரி விப்பது எனத் தெரியாமல் மக்கள் அகதிகளைப் போல் வாழ்கின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். செங்கல்பட்டில் ஞாயிறன்று (மே 19) செய்தியாளர்களிடம் அவர்கூறியது வருமாறு:

குடிநீர் பற்றாக்குறை

தமிழகத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல்நடந்திருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றி ருப்பார்கள். மாற்று ஏற்பாடுகள் செய்திருப்பார்கள். ஏராளமான பிரச்சனைகளை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தமிழக மக்கள் அகதிகள் போல் திரி கின்றனர். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து மாநில அரசு கவலைப்படவில்லை. இந்த வறட்சியைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் நீர்நிலை களை சீர்படுத்தலாம். ஆனால் எதற்கெடுத்தாலும் தேர்தலைக் காரணம் காட்டுகின்றனர். அதே போன்று டெல்டா மாவட்டத்தில் காவேரியில் குடிக்கத் தண்ணீர் வருமா என எதிர்பார்க்கும் நேரத்தில் விவசாய நிலத்தில் கெயில் குழாய் பதிக்கிறது. இப்படி மக்களைப் போட்டுப் பந்தாடும் வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பன்னாட்டு உள்நாட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. இங்குப் பணி செய்திடும் தொழி லாளர்கள் குறித்து அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை. தொழிற்சங்கம் வைத்தாலே பணி நீக்கம் என்பது பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் தொழிற்சாலையில் சாதாரண நடைமுறையாக மாறிவிட்டது. அப்படியானால் தொழிற்சங்க சட்டம்எல்லாம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

நீதிமன்றமும் உத்தரவும்


`ஹூண்டாய் கார் தொழிற் சாலைக்கு உதிரிபாகம் தயாரிக்கும் சோவல் தொழிற்சாலை அவாசின்என்ற நிறுவனத்திற்குத் தர வேண்டிய பணத்திற்காக அவாசின் நிறுவனம் நீதிமன்ற உத்தரவுடன் சோவல் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை எடுக்க வந்தபோது சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் அங்குள்ள தொழி லாளர்கள் வாழ்வாதாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்காக நீதிமன்றம் முத்துக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. “இயந்திரங்களை எடுத்துச் செல்லாதீர்கள், வழக்கில் எங்க ளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியது குற்றமா? இயந்திரங் களை எடுத்துச் சென்றுவிட்டால் தொழிலாளர்களையும் தொழி லாளர்கள் குடும்பத்தையும் யார் காப்பாற்றுவது? இதுபோன்ற பிரச்சனைகளில் நீதிமன்றம், அரசு, காவல்துறை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும்.

தமிழக மாணவர்கள் நிலை


அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலை தமிழகமாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வித் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை நிரப்பு வதில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கின்ற விதிமுறைகளை மாற்ற வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதே போன்று அகில இந்தியப் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் போதிய பயிற்சிகள் தரவேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக