மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா, IoTechWorld Avigation Pvt Ltd-க்கு, ட்ரோன் விதிகள் 2021-ன்கீழ், முதல் தகுதிச் சான்றிதழை வழங்கினார். 2017-ம் ஆண்டில் குருகிராமில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில், விவசாயத்துறைக்கு உதவி செய்யும் ட்ரோன்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.
IoTechWorld சான்றிதழுக்கான விண்ணப்பத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இணையதளத்தில் 2022 மே 11-ம் தேதி சமர்ப்பித்த நிலையில், 34 நாட்களுக்குள் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ட்ரோன் விதிகள் 2021, இந்திய தர கவுன்சில் அல்லது சான்றிதழ் வழங்கும் அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்க 60 நாட்களும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு 15 நாட்களும் என மொத்தம் 75 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதால், 60 நாட்களில் தகுதிச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.




