வியாழன், 2 செப்டம்பர், 2021

விமான நிலையங்களில் பிராந்திய விமான போக்குவரத்தை மேம்படுத்த உடான் திட்டத்தை, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.


 விமான போக்குவரத்து உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த, நேரடியாக தலையிடும்படி தெலங்கானா மற்றும் மேகாலயா முதல்வர்களுக்கு மத்திய  விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர்ஆதித்யா சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். 

தெலங்கானா முதல்வர் திரு கே.சந்திரசேகர ராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஐதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கான (HIAL) சலுகை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல், மேகாலயா முதல்வர் திரு கன்ராட் கே சங்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், துரா விமான நிலைய செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மக்களுக்கு விமான போக்குவரத்தை மலிவானதாக்க, விமான சேவை அளிக்கப்படாத, குறைவான விமான சேவை இருக்கும் விமான நிலையங்களில் பிராந்திய விமான போக்குவரத்தை மேம்படுத்த  உடான் திட்டத்தை, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக