தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் பேரிடர் மேலாண்மையின் வரலாற்றை மாற்றியுள்ளன.
பேரிடர் அபாயங்களை குறைப்பதற்காக உலகம் முழுவதும் பின்பற்றப்படும் சிறந்த முறைகளை ஆராய வேண்டும். சூழலுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
வெள்ள பாதிப்பு ஏற்படும் 350 மாவட்டங்களில், ஆப்தா மித்ரா திட்டத்தை அரசு அமல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்கு 28 மாநிலங்கள், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளிலும், பேரிடர் மேலாண்மைக் கல்வியை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. பள்ளிக் குழந்தைகளிடம் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி வளர்க்கப்பட்டால், அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவியாக இருப்பர்.
நாட்டில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கங்கள் பேரிடரால் பாதிக்கும் பகுதிகளாக உள்ளன. நாட்டின் 58 சதவீத நிலப்பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக உள்ளன. 12 சதவீத பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக உள்ளன. கடலோரத்தில் 7,516 கி.மீ தூரம் புயல் பாதிக்கக்கூடிய பகுதிகளாக உள்ளன. 68 சதவீத நிலப்பகுதி வறட்சியால் பாதிப்படையக் கூடிய பகுதிகளாக உள்ளன. இதனால் நமது நாட்டில் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். நமது பயணம் இன்னும் முடியவில்லை. நாம் இன்னும் வேகமாக இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக