டோக்கியோ பாராலிம்பிக் வீரர்களுக்கு குருகிராமில் இன்று நடந்த பாராட்டு விழாவில் உரையாற்றிய திரு.வெங்கையா நாயுடு கூறியதாவது:
நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். விளையாட்டை இளைஞர்களுக்கு ஈர்ப்பானதாகவும், சாத்தியமான தொழில் வாய்ப்பாகவும் மாற்ற வேண்டும். இது தொடர்பாக ஹரியானா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளூர் அளவில் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி, விளையாட்டில் திறமையுள்ளவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.
விளையாட்டு, ஆரோக்கியமான போட்டியில் வெல்லும் ஆசையை தூண்டுவதோடு, ஒருவரை உடல் தகுதி, ஒழுக்கம், குழு உணர்வுடன் இருக்கவும் வைக்கிறது.
அதிகரிக்கும் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்கள், தனி நபரின் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி, கொரோனா வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பை அதிகமாக்குகிறது. ஆகையால், ஆரோக்கியமான உணவு மற்றும் விளையாட்டுக்கள், நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களை ஹரியானா அரசு மிகப் பெரிய அளவில் ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது. இது மற்ற மாநிலங்களையும் ஊக்குவிக்கும்.
இளைஞர்கள் தங்கள் உடல் தகுதியில் கவனம் செலுத்தி, முறையான சமைத்த பாரம்பரிய உணவுகளை உண்டு, இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும். குடியிருக்கும் மற்றும் வேலை செய்யும் இடங்களில் நல்ல சூரிய ஒளி, காற்றறோட்டம் இருப்பதும் முக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக