இந்தியாவும் ஆப்பிரிக்காவும் நெருங்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுமுறையைப் பகிர்ந்து வருகின்றன. சாகர் (மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்) மற்றும் வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) ஆகிய இரண்டு வழிகாட்டு கொள்கைகளின் அடிப்படையில் இந்திய-ஆப்பிரிக்க பாதுகாப்பு உறவு முறைகள் அமைந்துள்ளன.
இதையடுத்து வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற உள்ள பாதுகாப்புக் கண்காட்சியை முன்னிட்டு இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நடத்தும் இந்த கூட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தியா- ஆப்பிரிக்கா: ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்கான உத்தியை பின்பற்றுதல்' என்பது இந்தக் கூட்டத்தின் முக்கிய கருப்பொருள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக