சனி, 21 ஆகஸ்ட், 2021

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சாதாரண மக்களின் எட்டா கனவாக இருந்த விமானப் பயணம் தற்போது அனைவருக்கும் சாத்தியமாகி வருகிறது.- திரு ஜோதிராதித்ய சிந்தியா


 ஜபல்பூர்-தில்லி வழித்தடத்தில் இண்டிகோ விமானங்களின் சேவையை மத்திய சிவில்  விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) ஆகியோர் சிவில்  விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு பிரதீப் கரோலாவுடன் இணைந்து காணொலி மூலம் துவக்கி வைத்தனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் மதிப்புறு விருந்தினராக காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில்  விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 7 வருடங்களில் இந்திய விமான போக்குவரத்து துறை ஜனநாயகமயமாக்கப் பட்டுள்ளது. சாதாரண மக்களின் எட்டா கனவாக இருந்த விமானப் பயணம் தற்போது அனைவருக்கும் சாத்தியமாகி வருகிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜபல்பூரில் பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இன்று முதல், நாட்டின் தலைநகரத்தில் இருந்தும், வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்தும் கூடுதல் விமான சேவைகள் ஜபல்பூருக்கு கிடைக்கும்,” என்றார்.

“இன்று நாங்கள் புதிய விமான சேவைகளை மட்டும் ஜபல்பூரில் இருந்து துவக்கி வைக்கவில்லை, ஜபல்பூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான ரூ 421 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளோம். 10,000 சதுர அடியிலான முனைய கட்டிடம், புதிய ஏடிசி கோபுரம், பெரிய விமானங்களுக்கு ஏற்ற வகையில் 1950 மீட்டரில் இருந்து 2750 மீட்டராக ஓடுதளம் விரிவாக்கம் ஆகியவை இதில் அடங்கும்,” என்றும் அவர் கூறினார்.

பாவ்நகர்-தில்லி வழித்தடத்தில் முதல் நேரடி விமான சேவையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா துவக்கி வைத்தார்



பாவ்நகர்-தில்லி வழித்தடத்தில் முதல் நேரடி ஸ்பைஸ்ஜெட் விமான சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) ஆகியோர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு பிரதீப் கரோலாவுடன் இணைந்து காணொலி மூலம் துவக்கி வைத்தனர்.

புதுதில்லி ராஜீவ் காந்தி பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி முதன்மை விருந்தினராக காணொலி மூலம் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, "பாரம்பரிய நகரமான பாவ்நகரில் இருந்து தில்லிக்கு முதல் நேரடி விமான சேவையை துவக்கி வைப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். பண்டைய காலங்களில் இருந்து ஒட்டுமொத்த குஜராத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் இந்நகரம் முக்கிய பங்காற்றியுள்ளது. வைரம் வெட்டுதல், முலாம் பூசுதல் மற்றும் கப்பல் உடைத்தல் தொழிலில் முக்கிய மையமாக இந்நகரம் விளங்குகிறது. மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட 'உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம், உள்ளுரில் இருந்து உலகம் வரை' முன்னெடுப்புகளின் கலவையாக உள்ள இந்தியாவின் முக்கிய நகரமாக பாவ்நகர் விளங்குகிறது," என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக