அச்சிடப்படாத சிறிய அளவிலான ஆய்வை மேற்கோள் காட்டி, ஆயுர்வேதத்திற்கு எதிராக, குறிப்பாக ஆயுஷ் அமைச்சகத்திற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருகின்றன. பல்வேறு ஆய்வுகள் மற்றும் பல தரப்பு மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் கொவிட்-19 சிகிச்சை மற்றும் மேலாண்மையில் பயனளிக்கும் மூலிகையான ஆயுஷ் 64 பற்றி இந்த ஒருதலைப்பட்சமான தவறான செய்தி அமைந்துள்ளது.
ஊடகத்தில் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள டாக்டர் ஜெய்கரன் சரணின் கருத்தை அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், “ஆயுஷ் 64 மருந்து, தரமற்றது என்றோ அல்லது பயனில்லாதது என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை. மாறாக, ஆயுஷ் 64 மருந்து மிகச்சிறந்த பயனளிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளும் வகையில் ஆயுஷ் 64 மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று ஆய்வு முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன”, என்று கூறியுள்ளார்.
உண்மை தன்மை குறித்து போதிய புரிதல் இல்லாமல் தவறான செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதற்கு ஆயுஷ் அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக