வெள்ளி, 25 ஜூன், 2021

இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சி 2021 ஜூன் 24 அன்று நிறைவடைந்தது.


 இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சி 2021 ஜூன் 24 அன்று நிறைவடைந்தது.

இந்திய கடற்படையின் மிக் 29கே விமானம், நீண்டதூர ரோந்து விமானம், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும், இந்திய விமானப்படையின் ஜாக்குவார் மற்றும் சு 30 எம்கேஐ போர் விமானங்கள், வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானம் உள்ளிட்டவையும் இதில் பங்கேற்றன.

சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை (ARTRAC) ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே இன்று பார்வையிட்டார்.


 சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை (ARTRAC)  ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே இன்று பார்வையிட்டார். ராணுவ உத்தி அம்சங்கள், கோட்பாடு திருத்தங்கள், செயல்பாட்டு சவால்கள், தயார்நிலை, தொழில்நுட்பத்தை புகுத்துதல் ஆகியவை குறித்து ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.

தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.


 தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.

இந்த துரித பரிசோதனை உபகரணத்தை  தில்லி ஐஐடியின் உயிரிமருத்துவ பொறியியல் துறை போராசிரியர் டாக்டர் ஹர்பல் சிங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமானப் பணி: கொச்சியில் ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்


 கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும், முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார்.

அவருடன்  கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், கடற்படை தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா ஆகியோர் உடன் சென்றனர். கப்பல் கட்டப்படும் இடத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அப்போது, இந்த கப்பலை கடலில் இறக்கும் நிகழ்ச்சி கடந்தாண்டு நவம்பரில் வெற்றிகரமாக நடைப்பெற்றதாக திரு ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு .முருகேசன் என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதர்ச்சியயையும் , வருத்தத்தை ஏற்படுத்துகிறது .