இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சி 2021 ஜூன் 24 அன்று நிறைவடைந்தது.
இந்திய கடற்படையின் மிக் 29கே விமானம், நீண்டதூர ரோந்து விமானம், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும், இந்திய விமானப்படையின் ஜாக்குவார் மற்றும் சு 30 எம்கேஐ போர் விமானங்கள், வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானம் உள்ளிட்டவையும் இதில் பங்கேற்றன.




