வெள்ளி, 25 அக்டோபர், 2019

மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன் வாழ்த்து பெற்றார்

மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம் விக்கிரவாண்டி
சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன் வாழ்த்து பெற்றார்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் இன்று சந்தித்தனர். மருத்துவர் அய்யா அவர்களிடம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ள முத்தமிழ்ச் செல்வன் வாழ்த்து பெற்றார். அனைவருக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.


இந்த சந்திப்பின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் தங்க. ஜோதி, சி. சிவக்குமார், மாநிலத் துணைத் தலைவர் வே.ஹரிஹரன், வன்னியர் சங்கத் துணைத் தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் இர.புகழேந்தி, மாநில துணை அமைப்புச் செயலாளர் பழனிவேல், அதிமுக தரப்பில் வானூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் சுரேஷ்பாபு ஆகியோரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக