புதன், 30 மார்ச், 2022

‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது! - கி.வீரமணி

 ‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது!

‘நீட்’  தேர்வு தோல்விபற்றி எதையும் கற்பனையாகக் கூறவில்லை - ஆங்கில  ஏடுகளில் வெளிவந்துள்ள ஆதாரத்தைப் பாரீர்! பாரீர்!!

வெளிநாட்டினருக்கு (என்.ஆர்.அய்.) என்ற பெயரால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடங்கள்! - கி.வீரமணி

‘நீட்’ தேர்வு என்ற ‘கண்ணிவெடியை’ அகற்றவேண்டாமா?

ஏப்.3 முதல் ஏப்.25 ஆம் தேதிவரை மாநிலம் தழுவிய

எனது நீண்ட நெடிய பயணம் - தோழர்களே!

‘நீட்’ (Neet) மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு, முதல்  குரல் கொடுத்து, அனைத்திந்தியாவிற்கே, வழமைபோல் வழிகாட்டி வருகிறது.

‘நீட்’  தேர்வு, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையாலும், அதன்கீழ் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பின் ‘ஊழல்’ மன்னனாகத் திகழ்ந்தவர்மீது அமலாக்கத் துறை பாய்ந்து, அதன்பிறகு அவர்மீதான நடவடிக்கைகள் காணாமற்போய், மீண்டும் ‘‘ஹீரோவாகி’’விட்ட குஜராத்தின் கேதன் தேசாய் வழிகாட்டுதலில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

20 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கொடுமையை நாடே அறியும்

இந்தத் திணிப்புத் தேர்வின்மூலம் ஏழை, எளிய, கிராமாந்திர, ஒடுக்கப்பட்ட சமூகங்களான எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டதோடு, இந்தக் கொடுமையினால் 12 ஆம் வகுப்பில் மிக அதிகமான மதிப்பெண் வாங்கியவர்கள்கூட இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்று வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலையே நீடிக்கிறது!  பரவலான அச்சத்தின் காரணமாக செல்வி அனிதா தொடங்கி, சுமார் 20 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கொடுமையை நாடே அறியும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம்

‘‘1. ‘நீட்’  தேர்வினால் மருத்துவர்களின் திறமை உயரும்

2. மருத்துவக் கல்வி எளிய முறையில் கிடைக்கும்

3. ஊழல் நடைபெறாமல் தடுக்கப்படும்.’’

- இவ்வாறெல்லாம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் ‘‘அவாள்’’ மூலம் பரப்பப்பட்டு வருகிறது!

ஆனால், இப்பொழுது உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டதே!

‘உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்‘ என்று பட்டுக்கோட்டையார் பாடியது போன்று, யதார்த்தம் வெளிச்சம் போடுகிறது.

அரசமைப்புச் சட்ட விரோத, எதிர் நடவடிக்கை

கடந்த சில நாள்களாக, ஆங்கில நாளேடுகளில் வெளிவந்துள்ள செய்திகளை அறியும் எவரும் ‘நீட்’  தேர்வு எப்படி முழுத் தோல்வியில் முடிந்த மூர்க்கத்தனம்மிக்கது என்பதையும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மாநிலங்களிடமிருந்தும், பல்கலைக் கழகங்களிடமிருந்து பறிக்கும் அரசமைப்புச் சட்ட விரோத, எதிர் நடவடிக்கை கொண்டதே என்பதையும் எவரும் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ ‘நீட்’  தேர்வு தோல்விபற்றி எதையும் கற்பனையாகக் கூறவில்லை என்பதற்கு அனுபவங்களைப் பேசவிட்ட ஊடகங்களின் கருத்துகளை - அதே ஆங்கில  வாசகங்களை தமிழிலும் புரிந்துகொள்ளத் தந்துள்ளோம்.

அக்கிரகார தலைமைக் கட்சியின் வாதங்கள் எப்படிப்பட்ட புரட்டு என்பது புரியவில்லையா?

பா.ஜ.க. என்ற பார்ப்பனீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். என்ற அக்கிரகார தலைமைக் கட்சியின் வாதங்கள் எப்படிப்பட்ட புரட்டு என்பது இதன்மூலம் புரியவில்லையா?

நம் மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது; வாக்களித்து, மக்களாட்சியில் ஆட்சியாளர்களை அமர்த்துபவர்களில் பெரிதும் ஒடுக்கப்பட்ட கிராமங்களில் வாழும் ஏழை, எளிய, விவசாயத் தொழிலாளர்களே, பெண்களே - இவர்களின் பிள்ளைகள் டாக்டர்களாக ஆவதைத் தடுக்கும் இந்த ‘நீட்’  தேர்வு என்ற ‘‘கண்ணிவெடியை’’ அகற்றவேண்டாமா? அதற்குத்தான் தோழர்களே, எனது மாநிலம் தழுவிய தொடர் நெடிய பயணம் 25 நாள்களுக்கு.

‘நீட்’ தேர்வில் கடைசி இடம்பெற்ற மாணவனுக்கு- வெளிநாடுவாழ் இந்தியருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்!

இதோ ஏடுகள் தரும் உண்மைகள்:

'டைம்ஸ் ஆப் இந்தியா', 27.3.2022

1. NEET tail-enders jump queue, grab med seats

1.  நீட் தேர்வில் வரிசையில் கடைசியாக இருக்கும் மாணவர்கள் மருத்துவ இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

2.At Pravara Institute of Medical Sciences, Loni (Maharashtra), the last management seat was filled by rank 83,817 while the last NRI seat went to rank 8,72,911. At Sri Devaraj Urs Medical College, Kolar, the last management seat was allotted to rank 86,416 and its last NRI seat to rank 8,76,357.

2. மகாராஷ்டிரா லோனி நகரில் உள்ள பிரவாரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், மருத்துவக் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீடு, நீட் தேர்வில் கடைசி ரேங்க் அதாவது 83,817 ரேங்க் பெற்ற மாணவருக்கு கிடைத்தது. இதே கல்லூரியில், வெளி நாடு வாழ் இந்தியருக்கான (என்.ஆர்.அய். கோட்டா) இடம், 8,72,911 ரேங்க் பெற்ற மாணவருக்கு தரப்பட்டுள்ளது.

கோலாரில் உள்ள சிறீ தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீடு 86,416 ஆவது இடத்திற்கும், என்.ஆர்.அய். கோட்டா 8,76,357 ஆவது இடத்திற்கும் ஒதுக்கப்பட்டது.

3.This scenario has played out in medical institutes across the country.

 3. இதே முறையில்தான் நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் நடைபெற்றுள்ளது.

4.“College agents have candidates on standby to beat the system. Those with low scores but high paying power could get seats,” Rued parents’ representative Sudha Shenoy.

4.குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் அதிக பணம் தருபவர்களுக்கு இடம் பெற்றுத் தர ஏஜெண்டுகள் நாடு முழுவதும் வேதனைக்குள்ளான பெற்றோர்களின் பிரதிநிதியாக சுதா ஷெனாய் கூறினார்.

'இண்டியன் எக்ஸ்பிரஸ்', 17.10.2021

NEET hasn’t created the equality of opportunity it had promised It is biased towards CBSE curriculum and gives unfair advantage to students from privileged backgrounds. Written by Sunny Jose, Satyam Sunkari

How can NEET promote parity of participation when aspiring first-generation students from marginalised and poor households participate from a highly unequal position in the first place?

நீட் தேர்வு குறித்து வாக்குறுதியளித்தபடி சமத்துவ வாய்ப்பை உருவாக்கவில்லை. இது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு ஒரு சார்புடையது மற்றும் வசதி படைத்த பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு நியாயமற்ற நன்மைகளை அளிக்கிறது. சன்னி ஜோஸ், சத்யம் சுங்கரி எழுதியது!

தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் முதலில் சமமற்ற நிலையில் இருந்து பங்கேற்கும்போது, நீட் எவ்வாறு சமநிலையை ஊக்குவிக்கும்?

'தி இந்து', 6.2.2022

ஆங்கில ‘இந்து’ பத்திரிக்கையில் (6.2.2022) அன்று வந்துள்ள நீட் தேர்வு குறித்த கட்டுரையிலும், பிளஸ் 2இல் 1137 மார்க் பெற்ற நட்சத்திரப்ரியா, 2017இல் நீட் எழுதத் தொடங்கி, 3 ஆண்டு கால முயற்சிக்குப் பின், 7.5% ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. 3 ஆண்டு காலம் வீண்.

'இண்டியா டுடே', 16, 2018

NEET: Zero marks in physics, chemistry could still get you a MBBS seat

Over 400 students with marks either in single digit or zero and negative in physics and chemistry were able to get admission into MBBS colleges in 2017.

டாக்டர் சுனில் சாண்டி, தலைமை மருத்துவ அதிகாரி, அய்டிசி சுகாதார நலம் பராமரிப்புத்துறை

(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 29.3.2022இல் எழுதிய கட்டுரையில் இருந்து)

1.Has NEET served the purpose of its creation?

The Central government, the bureaucracy and the MCI proposed in 2012 what was considered to be the panacea to rid medical education of all its ills.

1.   நீட் அதன் உருவாக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றியதா?

ஒன்றிய அரசு, அதிகார வர்க்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் ஆகியவை 2012 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வியை அதன் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பதற்கான ‘சஞ்சீவி' என்று முன்மொழிந்தன.

2.Tamil Nadu has taken the step of rejecting what it feels is a self-defeating formula as far as career opportunities of state aspirants are concerned. There is much truth in this assumption, confirmed also by the trends of manpower deficits in other parts of the nation.

2. மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு தொடர்ந்து நீட் தேர்வை நிராகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் அனுமானத்தில்  நிறைய உண்மை உள்ளது, இது நாட்டின் பிற பகுதிகளில் மனிதவள பற்றாக்குறையின் போக்குகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

3.What is more worrying and unfathomable for the health ministry is that NEET has tilted the results of medical education away from the public health needs of the country. In that regard, NEET has been self-defeating.

3.சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் கவலையான மற்றும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்னவென்றால், மருத்துவக் கல்வியின் பயன்களை நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளிலிருந்து  நீட் தேர்வு சாய்த்து விட்டது. அந்த வகையில் நீட் தேர்வு தன்னைத்தானே தோற்கடித்துள்ளது.

மருத்துவத் துறைக்கு தகுதி எது?

4.That a student with 99% marks in an entrance examination without a reason-to-be is not necessarily suitable for medicine, but a rural student with 55% with a mission and motivation may be, is a fact that needs greater recognition.

4. எந்தக் காரணமும் இல்லாமல் நுழைவுத் தேர்வில் 99% மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மருத்துவத்துக்குத் தகுதியானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் 55% மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர் இலக்கும் ஊக்கமும் கொண்டவராக இருந்தால், மருத்துவத்துறைக்கு தகுதியானவராக முடியும் என்பது அதிக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

5.The hypothesis that merit determined by marks alone will produce the best doctors is erroneous. While a few may be, most eminent doctors in India today are not necessarily toppers

5. மதிப்பெண்களால் நிர்ணயிக்கப்படும் தகுதி மட்டுமே சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்ற கருதுகோள் தவறானது. ஒரு சிலர் இருக்கலாம் என்றாலும், இன்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான புகழ்பெற்ற மருத்துவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இல்லை.

‘நீட்’: மறுஆய்வு தேவை

6.It is time to review NEET and its outcomes from the viewpoint of India’s primary health needs.

6. இந்தியாவின் முதன்மை சுகாதாரத் தேவைகளின் பார்வையில் இருந்து  நீட் மற்றும் அதன் விளைவுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது.

7.Tamil Nadu has taken the step of rejecting what it feels is a self-defeating formula as far as career opportunities of state aspirants are concerned. There is much truth in this assumption, confirmed also by the trends of manpower deficits in other parts of the nation.

7. மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் என்பதை உணர்ந்தே தமிழ் நாடு தொடர்ந்து நீட் தேர்வை நிராகரித்து வருகிறது. தமிழ் நாட்டின் அனுமானத்தில்  நிறைய உண்மை உள்ளது, இது நாட்டின் பிற பகுதிகளில் மனிதவள பற்றாக்குறையின் போக்குகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'தி டெலிகிராப்', 14.3.2022

1. நீட் தேர்வு தனியார் கல்லூர்களில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்கும் எனும் மாயை

Blame on Modi govt for high fees at private medical colleges

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்ததற்கு மோடி அரசு தான் காரணம்.

2. Experts have also cited a change the Modi government has made to regulations for educational institutions that now allow profit-making entities to set up medical colleges that may be attached to profit-making hospitals.

இப்போது லாபம் ஈட்டும் நிறுவனங்களை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளுடன் இணைக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் மோடி அரசாங்கம் அனுமதி செய்துள்ளதையும் நிபுணர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.  

2. நீட் தேர்வு தகுதியை அதிகரிக்கும் எனும் மாயை:

'டெக்கான் கிரானிக்கல்', துஷார் கவுசிக்

Neet-PG cut-off lowered

மருத்துவப் படிப்பில் முது நிலைப் படிப்பில் இரண்டாவது சுற்றின் முடிவில் 8000 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், கட்-ஆப் மதிப்பெண்ணை 50 என்பதில் இருந்து 35 ஆக குறைப்பு. அதாவது பொதுப் போட்டியில் 302 மதிப்பெண்ணுக்குப் பதிலாக 247 மதிப்பெண் இருந்தாலே போதும் என்கிறது தேசிய மருத்துவ போர்டு.

பேராசிரியர் திலீப் மண்டல்:

This year 158 aspirants, with ranks below 8 lakh, overnight became NRI and grabbed MBBS seats. They will be paying more than 1 crore to become a doc. NEET has in fact served it’s purpose of making medical education costly and exclusionary.

இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் குறைவான ரேங்க் கொண்ட 158 பேர் ஒரே இரவில் என்ஆர்அய் ஆகி எம்பிபிஎஸ் இடங்களைப் பிடித்தனர். டாக்டராக ஆவதற்கு ஒரு கோடிக்கு மேல் கட்டணம் செலுத்துவார்கள். உண்மையில் மருத்துவக் கல்வியை விலை உயர்ந்த படிப்பாகவும், ஏழை மக்களை வெளியேற்றும் நோக்கத்தையும் நிறைவேற்றியுள்ளது.

Punjab should also scrap NEET exam, it violates federal structure: Mahila Kisan Union

In a statement issued here on Friday, State President of Mahila Kisan Union, Bibi Rajwinder Kaur Raju, appealed to all the regional parties to abolish this pro-rich central entrance exam NEET on the lines of Tamil Nadu state and adopt old practice to admit students in MBBS course on the basis of class XII marks only in the medical colleges of their states.

Modern Dental College case:

Five Judge SC Judgement dated 2nd May, 2016:

எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியன மாநில அரசிடம் இருந்து நீர்த்துப் போகவில்லை.

மாநிலத்தின் சமமற்ற சூழலை மாநில அரசே நன்கு விளங்கிக் கொள்ள இயலும். மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநில அரசின் சட்டங்கள் தீர்மானிக்கும் போது மாணவர் நலன் பேணப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Para:98: “In view of the above, While the expert committee report mentioned above is yet to be acted upon by the Government, we do not express any view on its contents. We direct the Central Government to consider and take further appropriate action in the matter at the earliest”

Once the notifications under the Central statutes for conducting the CET called ‘NEET’ become operative, it will be a matter between the States and the Union, which will have to be sorted out on the touchstone of Article 254 of the Constitution. We need not dilate on this aspect any further”

Para 29: “The scope of entry 66 must be construed limited to its actual sense of ‘determining the standards of higher education’ and not of laying down admission process. In no case is the State denuded of its power to legislate under Entry 25 of List III. More so, pertaining to the admission process in universities imparting higher education”.

Para 30:“Infact, the State Government should be the sole entity to lay down the procedure for admission and fee etc. governing the institutions running in that particular state except the centrally funded Institutions like IIT, NIT etc. because no one can be a better Judge of the requirements and inequalites-in-opportunity of the people of a particular state than that state itself. Only the State legislation can create equal level playing field for the students who are coming out from the State Board and other streams.”

- Five Judge SC Judgement (dated 2nd May, 2016)

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளது எதிர்காலத்தைக் கருதி, ‘நீட்’  தேர்வை ஒழிக்கக் களம் காண வாருங்கள்; களத்திற்கு வர முடியாதவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுங்கள்!

மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்!

நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல - உங்களுக்காக; உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக! மறவாதீர்!

மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்; இது வரலாறு சொல்லும் பாடம் - அது உறுதி! உறுதி!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக