டிடிவி.தினகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிடிவி.தினகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.- டிடிவி.தினகரன்


 காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது.

செவ்வாய், 6 ஜூலை, 2021

மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும்.- டிடிவி.தினகரன்


 மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். 

எனவே, தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். 

புதன், 2 டிசம்பர், 2020

அம்மா நினைவு நாளில் சபதமேற்போம்!, தமிழகத்தையே அபகரிக்க நினைக்கும் தீயசக்தி கூட்டத்தைத் திரும்பவும் தலையெடுக்கவிடாமல் செய்வதற்கு உறுதி கொள்வோம்.- டிடிவி.தினகரன்



2021ல் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை நாம் அமைத்திட அம்மா நினைவு நாளில் சபதமேற்போம்!!!

தமிழகத்தையே அபகரிக்க நினைக்கும் தீயசக்தி கூட்டத்தைத் திரும்பவும் தலையெடுக்கவிடாமல் செய்வதற்கு உறுதி கொள்வோம். - டிடிவி.தினகரன்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு

தமிழகம் என்றென்றைக்கும் நினைந்து கொண்டாடுகிற தனிப்பெரும் தலைவரான நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மைவிட்டு மறைந்து நான்காண்டுகள் கடந்தோடிவிட்டன. ஆனால் நம் இதயத்தைவிட்டு அகலாமல் ஒவ்வொரு கணமும் நம்மை வழி நடத்தி வருபவர் அம்மா அவர்கள்தான். சோதனை நெருப்பாறுகளைக் கடந்து நெஞ்சு நிமிர்த்தி நாம் பயணிப்பதற்கான துணிச்சலை நமக்கு தந்து கொண்டிருப்பதும் நமக்குள்ளிருந்து இயக்கும் அம்மா எனும் அற்புத சக்திதான்!

வியாழன், 10 செப்டம்பர், 2020

புதன், 19 ஆகஸ்ட், 2020

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.- டிடிவி.தினகரன்


காவிரி டெல்டாவில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறந்திட வேண்டும்: ஈரப்பதத்தைக் காரணம் காட்டி விவசாயிகளை  இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்திடுக
 - டி.டி.வி.தினகரன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக
மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது - டிடிவி.தினகரன்


புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது
- டிடிவி.தினகரன்

மும்மொழிக்கொள்கை போன்றே புதிய கல்விக் கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில் அவசரமாக புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ஏற்களவே தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதே சரியாக இருக்கும். அப்படி வரும் போது குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதை 8ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்விதான் என்று அறிவிக்க வேண்டும்

ஞாயிறு, 26 ஜூலை, 2020

தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த வரைவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று பழனிசாமி அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.- டிடிவி.தினகரன்


இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA Drafl 2020) மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! 
இந்த வரைவுக்கு எதிராக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ! - டிடிவி.தினகரன்

இயற்கை வளங்களுக்கும் விவசாயத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் நிறைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (Environmental Impact Assessment - EIA Draft 2020) மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தொடங்குவதற்குச் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதியை வழங்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முன் மொழிந்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பேராபத்துக்களை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

திங்கள், 22 ஜூன், 2020

கையாலாகாதனத்தை மறைக்க கடவுள் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள் ? - டிடிவி.தினகரன்


சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: கையாலாகாதனத்தை மறைக்க கடவுள் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள் ? - டிடிவி.தினகரன்

சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களிலும் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், கடவுளின் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழக ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பது நியாயமல்ல

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா நோய் தாக்குதல் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், கோவை பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வரும் நிலையில், வெளிமாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவு என்று கூறியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார் என்று தெரியவில்லை

வெள்ளி, 19 ஜூன், 2020

தற்காலிக மருத்துவப் பணியாளர் நியமனத்தில் என்னதான் நடக்கிறது? தனியார் நிறுவன ஒப்பந்தம் பற்றி பழனிசாமி அரசு விளக்க வேண்டும் ! - டிடிவி.தினகரன்

தற்காலிக மருத்துவப் பணியாளர் நியமனத்தில் என்னதான் நடக்கிறது?
தனியார் நிறுவன ஒப்பந்தம் பற்றி பழனிசாமி அரசு விளக்க வேண்டும் !
 - டிடிவி.தினகரன்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணிகளுக்கான தற்காலிக மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடந்து வரும் குளறுபடிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னையில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டிருந்தது அதன்பிறகு திரைமறைவில் என்ன நடந்ததோ, திடீரென 'ஜென்டில்மேன் ஹெச்.ஆர் (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் மருத்துவப் பணியாளர் நியமனத்திற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டதாக தகவல்கள் வெளியாயின

கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா ? - டிடிவி.தினகரன் கேள்வி


கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா ?
ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையான மருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும்!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முடக்கம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC),வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளி, 12 ஜூன், 2020

கொரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள் தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்' என்பது போல் மக்களின் உயிரை வைத்து நாள் தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.- டிடிவி.தினகரன்


கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதல்? 
மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்க வேண்டும்.
 - டிடிவி.தினகரன்

சென்னையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே, சோதளை செய்துகொள்கிறவரும் 14 நாட்கள் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையர் திடீர் அறிவிப்பு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்கொன்றாக சொல்லி அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்

கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில் சென்னையில் வீடுதோறும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே சோதனை செய்து கொள்பவர் அவரது குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதில் கூறியிருக்கிறார். இதுவரை பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே இத்தகைய முறையில் தனிமைப்படுத்தி வந்தனர். தற்போதைய அறிவிப்பின் படி சோதனையில் நோய் இல்லை ("NEGATIVE") என்று வந்தாலும் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

திங்கள், 8 ஜூன், 2020

கொரோனா விவகாரத்தில் நிர்வாகத் திறனில்லாமல் ஆரம்பம் முதல் தவறு மேல் தவறுகளைச் செய்து நோயைக் கட்டுப்படுவதில் தோற்றுப்போய் நிற்கிற பழனிசாமி அரசு - டிடிவி.தினகரன்


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் பழனிசாமி அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்?
தெலங்கானாவைப் போல தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்! 
- டிடிவி.தினகரன்

தெலுங்கானாவைப் பின்பற்றி தமிழகத்திலும் 10 வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கொரோனா பாதிப்பினால் தெலுங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியிருந்த புவியியல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்து முந்தைய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், முந்தைய தேர்வு மதிப்பெண்கள் படியே தேர்ச்சியை அறிவிக்க இருக்கிறார்கள். 10 ஆம் வகுப்புக்கு மட்டுமல்ல மகாராஷ்டிராவில் பட்டப்படிப்புக்கான இறுதியாண்டு தேர்வுகளையே ரத்து செய்துவிட்டு முந்தைய பருவத்தேர்வுகளின் கூட்டு மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்குவ்தென முடிவெடுத்திருக்கிறார்கள்.

வெள்ளி, 15 மே, 2020

தமிழக தொழிலாளர்களை அழைத்து வரும் முயற்சி, பழனிசாமி அரசின் பாராமுகத்தால் பாதியிலேயே நின்றுவிட்டதாக வரும் செய்தியும் வருத்தமளிக்கிறது.


வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:
 ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான சிறப்புக்குழு விரைந்து 
செயல்பட வேண்டும்! - டிடிவி.தினகரன்

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பல்வேறு பணிகளுக்காக குவைத், மாலத்தீவுகள், உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் அங்கங்கே சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. விசா காலம் முடிந்து முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள், பொதுமன்னிப்பு பெருந்தொற்று நோய் பாதிப்பால் வேலையிழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சரியான உணவு, இருப்பிட வசதிகள் இன்றி குவைத்தில் தவித்து வருகின்றனர். ஒரே இடத்தில் பலரையும் அடைத்து வைத்திருப்பதால் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமா என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று மாலத்தீவுகளில் சிக்கிய தமிழக தொழிலாளர்களை அழைத்து வரும் முயற்சி, பழனிசாமி அரசின் பாராமுகத்தால் பாதியிலேயே நின்றுவிட்டதாக வரும் செய்தியும் வருத்தமளிக்கிறது.

செவ்வாய், 12 மே, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல. - டிடிவி.தினகரன்


கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில் திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல. - டிடிவி.தினகரன்

ஜூன் மாத இறுதிக்குப் பிறகே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று நான்கு நாட்களுக்கு முன்பு கூறியிருந்த கல்வியமைச்சர் இப்போது அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன்? அதற்குள் என்ன நடந்தது? எல்லாவற்றையும் போல இதிலும் ஆட்சியாளர்கள் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்களா?

கடந்த ஒரு வாரமாக பல நூறு பேர் நாள் தோறும் கூடுதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடும் இம்முடிவை பழனிசாமி அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

திங்கள், 11 மே, 2020

அமமுக- மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் சிந்தனையோடும் செயல்படுகிறார்கள் - டிடிவி.தினகரன்


அமமுக- மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் சிந்தனையோடும் செயல்படுகிறார்கள் - டிடிவி.தினகரன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி  மூட்டைகளில் சுகாதாரத்துறை அமைச்சரின் படம் இடம் பெற்றிருந்தது பற்றி பொது வெளியில் எல்லோராலும் பகிரப்பட்ட தகவலைத் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக (ஆண்கள்) செயலாளர் அமமுக தகவல் தொழிற்நுட்பப்பிரிவு திரு.முத்துக்குமார் அவர்களை காவல்துறையினர் அதிகாலையில் திடீரென கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ ஆயிரம் பகிர்ந்த ஒரு பதிவுக்காக திரு.முத்துக்குமாரைக் கைது செய்திருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் சிந்தனையோடும் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆட்சியாளர்கள் அதனால்தான் மக்களின் பாதுகாப்புப்பணிக்குக் கூட போதுமான காவலர்கள் இல்லாத இந்த நெருக்கடியான நேரத்தில், இதற்காக புதுக்கோட்டையில் இருந்து காவலர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

ஞாயிறு, 10 மே, 2020

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் - டிடிவி.தினகரன்


"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..." - என்பதை நிரூபிக்காதீர்கள் மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைப் பழனிசாமி அரசு திரும்பப்பெற வேண்டும்! - டிடிவி.தினகரன்

மக்களின் உணர்வுகளை மதிக்காமல், டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் இரண்டு நாட்களில் கொலை, தற்கொலை, குடும்ப வன்முறை,விபத்து என்று விரும்பத்தகாத சம்பவங்கள் மாநிலம் முழுக்க நடந்ததைப் பார்த்த பிறகும் மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்த பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துகிறேன்.

கொரோனா நோய் பாதிப்பும், அதனால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கும் ஒட்டுமொத்த மக்களையும் நொந்து போகச் செய்திருக்கிறது. வாழ்வாதாரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றிய கவலையுடன் ஒவ்வொருவரும் துயரம் மிகுந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள். இப்படியொரு நோத்திலும் மக்களை உறிஞ்சி கஜானாவை நிரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பழனிசாமி அரசு மதுக்கடைகளைத் திறந்ததால், நிகழ்ந்த கூத்துகளைப் பார்த்தபோது நெஞ்சம் பதறியது. கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்த அபாயகரமான நிலையைச் சரிசெய்ய முயலாமல்,
மக்களை தனித்திருக்கவும் விழித்திருக்கவும் அறிவுரை சொன்ன அரசே, மறுபுறம் மதுவிற்பதற்காக கூட்டத்தைக் கூட்டியது மன்னிக்க முடியாத செயலாகும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு தடைகளைத் தகர்த்து நமது பயணத்தைத் தொடர்வோம் - டிடிவி.தினகரன்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், உணர்விலும் " மேலூர் சாமி "யைப் பார்க்கிறேன்! - டிடிவி.தினகரன்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு....

வரலாறு நெடுகிலும் மாற்றங்களை ஏற்படுத்திய இயக்கங்களையும் அமைப்புகளையும் அப்பழுக்கில்லாத தொண்டர்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள், அப்படி புரட்சித்தலைவர் தொடங்கிய, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கழகத்தை மீட்க, துரோகத்தை வீழ்த்திட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் நம் இயக்கத்தையும் அம்மாவின் உண்மையான தொண்டர்களாகிய நீங்கள்தான் உருவாக்கினீர்கள். கொள்கையில் கொண்ட உறுதியை தலைமை மீதான உள்ளன்பால் இந்த இயக்கத்தைக் கட்டி எழுப்பிய லட்சோப லட்சம் தொண்டர்களில் முன்னணி வரிசையில் நின்று நம் இதயத்திலும், நம் இயக்கத்திலும் இரண்டற கலந்திட்ட என் ஆருயிர்ச் சகோதரன் மேலூர் ஆர்.சாமியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் இன்று.

எப்போதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கும் சாமியின் நினைவுகள், இந்த நாளில் இன்னும் அதிகமாக சுழல்கின்றன. மாண்புமிகு அம்மா அவர்களின் அன்பைப் பெற்று கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக ஆர்.சாமியும், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக நானும் தமிழகம் முழுவதும் இணைந்து பணியாற்றிய நாட்கள் பசுமையாக மனதில் இருக்கின்றன. மேலூர் தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்து, தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வாகை சூடிய சாமி, ஆயிரம் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கழகம் காக்க ஒரு போராட்டத்திற்குத் தயாரான காட்சிகள் என் கண் முன்னே இப்போதும் நிழலாடுகின்றன. என் சகோதரன் சாமியின் அந்த மன உறுதியையும், வீரத்தையும் எப்போது நினைத்து பார்த்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் புத்தம்புது உத்வேகமும், லட்சியத்தை வென்றெடுப்பதற்கான உன்னத சக்தியும் கிடைத்திடும்.

சனி, 9 மே, 2020

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - டிடிவி.தினகரன்


தாய்மை எனும் ஈடு இணையில்லாத குணத்தோடு திகழ்கிற அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - டிடிவி.தினகரன்

தியாகத்தின் மறு உருவம் கண்கண்ட கடவுளாக தாய் இருப்பதால்தான் அவரை முதலிடத்தில் வைத்து வணங்குகிறோம். எதிர்பார்ப்பில்லாத அன்பு, எப்போதும் அரவணைக்கிற பண்பு, தேவையான இடத்தில் கண்டிப்பு, பலனை எதிர்பார்க்காத பாசம் போன்ற போற்றத்தக்க குணங்களின் ஒருமித்த அடையாளமாக இருப்பது தாய்மை.

அப்படி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்து வாழும் தாய் நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். 'அம்மா' என்று சொன்னாலே இன்றைக்கு அத்தனை பேரின் கண் முன்னேயும் தமது உருவம் தோன்றுகிற அற்புதத்தை நிகழ்த்திய அம்மா அவர்களை இந்த நல்ல நாளில் நினைவு கூர்வோம்.

வெள்ளி, 8 மே, 2020

மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் 'மின்சார திருத்தச் சட்டம் -2020 க்கான வரைவை சட்டம் ஆக்கக்கூடாது - டிடிவி.தினகரன்


2003ல் தி.மு.க அங்கம் வகித்த மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்டத்தின் பாதிப்பிலிருந்து மீளவே 10 ஆண்டுகளாயின; மின்சாரத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள்!

நாடு முழுவதும் மின்பகிர்மானத்தை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் 'மின்சார திருத்தச் சட்டம் -2020 க்கான வரைவை சட்டம் ஆக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வராத ஊரடங்கு நேரத்தில் இப்படியொரு ஒரு சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களின் கருத்துக்கேட்புக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல.

மேலும் இச்சட்டத்திருத்தின் மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் ஆகியவை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம், வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அளிக்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் போல எந்தக் கட்டுப்பாடும் அரசிடம் இல்லாமல், மின் கட்டணமும் அடிக்கடி உயர்ந்துகொண்டே இருக்கும். எனவே, மின்சார சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

செவ்வாய், 24 மார்ச், 2020

யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி.தினகரன்


யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி.தினகரன்

வசந்த காலத்தின் தொடக்கமான யுகாதி புத்தாண்டு கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பல மதங்களும், இனங்களும், மொழிகளும், கலாச்சாரமும், பண்பாடும் இணைந்து உலகிற்கே ஒற்றுமையின் அடையாளமாக திகழும் தேசம் நம்முடைய இந்திய தேசம்.

அதிலும் எல்லோரையும் அரவணைப்பதில், எப்போதும் தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவே திகழ்ந்திருக்கிறது. நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இந்த மண்ணில் வசிக்கின்ற அனைவரையும் சகோதர, சகோதரிகளாக கருதி அன்பு பாராட்டினார்கள். அம்மா அவர்களின் வழியில், அவரது திருப்பெயரைத் தாங்கி இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அதே வழியில் செயல்படும்.