செவ்வாய், 24 மார்ச், 2020

யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி.தினகரன்


யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி.தினகரன்

வசந்த காலத்தின் தொடக்கமான யுகாதி புத்தாண்டு கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பல மதங்களும், இனங்களும், மொழிகளும், கலாச்சாரமும், பண்பாடும் இணைந்து உலகிற்கே ஒற்றுமையின் அடையாளமாக திகழும் தேசம் நம்முடைய இந்திய தேசம்.

அதிலும் எல்லோரையும் அரவணைப்பதில், எப்போதும் தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவே திகழ்ந்திருக்கிறது. நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இந்த மண்ணில் வசிக்கின்ற அனைவரையும் சகோதர, சகோதரிகளாக கருதி அன்பு பாராட்டினார்கள். அம்மா அவர்களின் வழியில், அவரது திருப்பெயரைத் தாங்கி இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அதே வழியில் செயல்படும்.

பல நூற்றாண்டு காலமாக தமிழக மக்களோடு இரண்டற கலந்து அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, தமிழகத்தில் கல்வி, கலை, தொழில், வணிகம் உள்ளிட்டவற்றில் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வருகிற தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகளுக்கு யுகாதி புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவியட்டும்:

ஆரோக்கியமும் அன்பும் நிறையட்டும்' என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இந்தப் புத்தாண்டில் உலக மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக