மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
சட்டம் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி, முற்றிலும் பழுதடைந்துள்ள மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பழைய கட்டடத்திற்கு பதிலாக, புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
உள் (நீதிமன்றங்கள்) துறை குறித்த பின்வரும் அறிவிப்பினை இம்மாமன்றத்தில் வெளியிடுகின்றேன்.
குற்ற வழக்கு தொடர்வுத் துறை மற்றும் சட்டக் கல்வி இயக்குநரகங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சொந்தக் கட்டடம், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக