வெள்ளி, 27 மார்ச், 2020

கரூர் நாடாளுமன்ற தொகுதி சகோதர ,சகோதரிகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். - செ.ஜோதிமணி

பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்கும் உரிய  கரூர் நாடாளுமன்ற தொகுதி சகோதர ,சகோதரிகளுக்கு ஒரு  அன்பு வேண்டுகோள்.

இந்தியா  இன்னும் கொரொனா தொற்று பிரச்சனையில் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை. இந்த நெருக்கடியான சூழலில்  வீட்டிற்குள் இருப்பதே நமக்கும்,நாட்டிற்கும் நல்லது. 

மருத்துவ,சுகாதாரத் துறையினர் உயிரைப் பணயம்வைத்து உழைக்கிறார்கள். மற்ற பணிகளோடு மக்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று புரிய வைப்பதே பெரும் வேலையாக உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டு மக்கள் சிரமப்படுவார்களே என்று தாயுள்ளத்தோடு கவலைப்படுகிறார்கள். நான் அவர்களோடு பேசும் போது மக்களை  வீட்டிற்குள் இருக்கச் சொல்லி வலியுறுத்துங்கள் என்று தினமும்  வேண்டுகோள் வைக்கிறார்கள். 

அவர்கள் கவலை நியாயமானது. நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். நீங்கள் பத்திரமாக இருக்கவேண்டும் என்று மனது கவலை கொள்கிறது.  தயவுசெய்து வீட்டிற்குள் இருங்கள். அரசுக்கு ஒத்துழையுங்கள். 

ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரப்  பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். தொகுதியில் இருந்து வருகிற பிரச்சினைகளை தொடர்ந்து அரசின்,அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். 

வீட்டிலிருப்பதன் முக்கியதுவத்தை  வலியுறுத்தவே நான் வீட்டிலிருக்கும் புகைப்படத்தை இரு தினங்களுக்கு முன்பு  வெளியிட்டேன். 

ஆகவே அவசியம் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று உங்கள் மீதுள்ள அளவற்ற அன்பு காரணமாக, உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக அல்ல உங்கள் மகளாக,சகோதரியாக வலியுறுத்திக்  கேட்டுக்கொள்கிறேன். 

நாம் அரசுக்கு ஒத்துழைத்தால் இந்த கடினமான காலகட்டத்தை நாம் எவ்வித  ஆபத்துமில்லாமல் கடந்துவிட  முடியும் 

அதுவரை.

வீட்டிற்குள் இருப்போம். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக