புதன், 19 ஆகஸ்ட், 2020

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.- டிடிவி.தினகரன்


காவிரி டெல்டாவில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறந்திட வேண்டும்: ஈரப்பதத்தைக் காரணம் காட்டி விவசாயிகளை  இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்திடுக
 - டி.டி.வி.தினகரன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை இழுத்தடிக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக
மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

டெல்டா பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லின் கொள்முதல் செய்வதற்குப் போதுமான நோடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன திறந்திருக்கும் சில கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி இழுத்தடிப்பு செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால் திடீர் மழையால் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முளைக்கிற பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு இடை டையில் விளைவித்திருக்கிற நெல், தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் வீணாகிப்போவது மிகுந்த வேதனை அளிக்கிறது. 'நெல் கொள்முதல் சரியாக நடக்கிறது' என்று ஆட்சியாளர்கள் வெறுமனே பேட்டி கொடுத்துவிட்டால் மட்டும் விவசாயிகள் கஷ்டம் தீர்ந்துவிடாது

எனவே, நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகம் திறப்பதுடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தின் அளவையும் அதிகப்படுத்திட தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நாட்கணக்கில் காத்திருக்க வைக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக