மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாய தினமாக தமிழகம் முழுவதும் தமாகாவினர் கொண்டாட்டம்
மக்கள் தலைவர் ஐயா திரு. ஜி.கே.மூப்பனார் அவர்களின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, ஆழ்வார்பேட்டை , அசோகா தெரு , தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில், திரு. ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள், ஐயா அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணுவித்து மரியாதையை செய்தார்.
தமிழகம் முழுவதும் த.மா.கா.வினர் மக்கள் தலைவர் அவர்களின் பிறந்தநாளை "விவசாயிகள் தினமாக" கொண்டாடிவருகின்றனர்.
இந்த வருடம் அரசின் கோட்பாடுகளான முகக்கவசம் அணிந்து , சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அளித்து கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக