சனி, 9 மே, 2020

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - டிடிவி.தினகரன்


தாய்மை எனும் ஈடு இணையில்லாத குணத்தோடு திகழ்கிற அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - டிடிவி.தினகரன்

தியாகத்தின் மறு உருவம் கண்கண்ட கடவுளாக தாய் இருப்பதால்தான் அவரை முதலிடத்தில் வைத்து வணங்குகிறோம். எதிர்பார்ப்பில்லாத அன்பு, எப்போதும் அரவணைக்கிற பண்பு, தேவையான இடத்தில் கண்டிப்பு, பலனை எதிர்பார்க்காத பாசம் போன்ற போற்றத்தக்க குணங்களின் ஒருமித்த அடையாளமாக இருப்பது தாய்மை.

அப்படி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்து வாழும் தாய் நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். 'அம்மா' என்று சொன்னாலே இன்றைக்கு அத்தனை பேரின் கண் முன்னேயும் தமது உருவம் தோன்றுகிற அற்புதத்தை நிகழ்த்திய அம்மா அவர்களை இந்த நல்ல நாளில் நினைவு கூர்வோம்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மா அவர்களின் அடியொட்டி செயல்படுகிற நாம், தாய்மையை மகிழ்ந்து கொண்டாடுவோம். தாயுள்ளத்தோடு நம்மிடம் அன்பு காட்டுகிற, ஆசிர்வதிக்கிற அனைவரையும் போற்றி வணங்கிடுவோம். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக