சனி, 16 மே, 2020

செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்திற்கு எதுவா உதடு மறைவற்ற முகக்கவசம்


செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்திற்கு எதுவா உதடு மறைவற்ற முகக்கவசம் - எடப்பாடி கே.பழனிசாமி

தமிழ்நாட்டில் COVID-19 - CORONA VIRUS தொற்று மேலும் பரவாமல் தடுக்கும்
பொருட்டு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள காலங்களில்மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் வண்ணம் அவர்களின் அன்றாடத் தேவைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வகையில் வழங்கிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன்பணிபுரிபவர்கள் உரையாடும் சமயம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் முகத்தின் உதடசைவு மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உதடு மறைவற்ற முக்கவசங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்கள் மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், காதுகேளாத சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்,
செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர் ஆகியோர்களுக்கு வழங்கும் விதமாக திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் காதுகேளாத நபர்கள் பிறருடன் தகவல் பரிமாற்றம் செய்யும் போது பிறரின் உதவு அசைவு மூலம் உரையாடலை தெளிவாக அறிவதற்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.

இத்திட்டத்தின் மூலம் ரூபாய். 12.15 இலட்சம் செலவில் 13,500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 81,000 எண்ணிக்கையிலான உதடு மறைவற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக