அகமதாபாத்தின் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 14.63 மெட்ரிக்டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.11.70 கோடியாகும். நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை பேணி பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.