செவ்வாய், 4 டிசம்பர், 2018

மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அளித்த அனுமதியை அடாவடி போக்கைக் கண்டித்தும், அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் வருகிற டிசம்பர் 04 ஆம் தேதி திருச்சியில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக