செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஆர்.கே.நகரில் தப்பித்த டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா சம்பந்தமான வழக்குகள் ரத்து 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டன. அதே போல் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்த பெயர் பட்டியல் தொடர்பான வழக்குகளும் தேர்தல் ஆணையத்தால் வழக்கு பதியப்பட்டுள்ளது.

 இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கிய பின்பு, நீதிபதி பணப்பட்டுவாடா சம்பந்தமான வழக்குகளை ரத்து செய்துள்ளார்.

   இது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, நீதிமன்றங்கள் மேல் இருக்கும் நம்பிக்கைக்கையும் சீர்குலைகிறது என பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக