வியாழன், 30 ஜூன், 2022

இந்தியர் ஒவ்வொருவரும் எளிதாக தொழில் தொடங்க முத்ரா திட்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. - பிரதமர் திரு. நரேந்திர மோடி


 ‘தொழில்முனைவோர் இந்தியா’ நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, ‘உருவாதல் மற்றும் விரைவுபடுத்தும் எம்எஸ்எம்இ செயல்பாட்டுத்’ திட்டம், முதன்முறை எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களின் கட்டமைப்புத் திறன் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (பிஎம்இஜிபி) முதல் எம்எஸ்எம்இ துறையை முன்னேற்றுதல் வரையிலான புதிய அம்சங்கள் போன்ற முக்கியமான முன்முயற்சிகளையும் தொடங்கிவைத்தார். 2022-23-க்கான பிஎம்இஜிபி பயனாளிகளுக்கு உதவித் தொகையை டிஜிட்டல் வழியாக அவர் பரிவர்த்தனை செய்துவைத்தார்; எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2022-ன் முடிவுகளையும் அறிவித்தார்; தேசிய எம்எஸ்எம்இ விருதுகளை வழங்கினார்; தற்சார்பு இந்தியா நிதியத்தில் 75 எம்எஸ்எம்இ-களுக்கு டிஜிட்டல் சமபங்கு சான்றிதழ்களை வழங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு.நாராயண் ரானே, திரு.பானு பிரதாப் சிங் வர்மா, நாடு முழுவதிலும் இருந்து எம்எஸ்எம்இ சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்போம்! - தொல்.திருமாவளவன்

 


குடியரசுத் தலைவர் தேர்தல்: சனாதனப் பயங்கரவாதிகளின் அடையாள அரசியல் எனும் சதித்திட்டத்தை முறியடிப்போம்! 

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்போம்! 

ஆந்திரா மற்றும் ஒடிசா முதல்வர்கள் இருவரும் தங்களின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! 

உலக வரலாற்றில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமானவை ஹிட்லரின் நாசிக் கொள்கையும், முசோலினியின் பாசிசக் கொள்கையும் என்பதை உலகம் அறியும். அத்தகைய இனவாதக் கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு வரையறுக்கப்பட்டதுதான் சங்பரிவார்களின் "ஒரேதேசம் - ஒரே கலாச்சாரம் " என்னும் மதவாத - சனாதனப் பயங்கரவாதக் கருத்தியலாகும். அதாவது சனாதனவாதிகள் இங்கே கட்டமைக்க விரும்பும் இந்து ராஷ்டிரம் ஒரே தேசம் என்பது என்பது ஹிட்லரின் ஜெர்மனியையும் முசோலினியின் இத்தாலியையும் தம்முடைய ஆதர்சமாகக் கொண்டதே ஆகும்.  ஹிட்லரின் இனவெறி ஆட்சியில் எப்படி யூதர்கள் மட்டுமின்றி ஜெர்மானியர்களும் கொடூர வதைகளுக்கு ஆளானார்களோ அதுபோலவே இந்து ராஷ்டிரம் என்பதும் இங்கே  சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி இந்துக்களுக்கும் பேராபத்தாகவே முடியும். அத்தகைய இந்து ராஷ்டிரத்தை அமைத்திட  அனைத்துத் தளங்களிலும் தமக்கு ஆதரவானவர்களை ஆங்காங்கே சனாதனிகள் தேடித்தேடி முதன்மையான அதிகார மையங்களில் அமர்த்தி வருகின்றனர். 

திங்கள், 27 ஜூன், 2022

பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு கடவுள் வசிப்பார் என்றும் சொல்வது உண்டு. ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் பல்வேறு சமூக தீமைகள் தலைதூக்கியுள்ளன.


 உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணா குடிலுக்கு சென்ற  குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், அங்கு தங்கியிருப்பவர்களுடன்  கலந்துரையாடினார்.

 அங்கு திரண்டிருந்தவர்களிடையே  பேசிய  குடியரசுத் தலைவர், நமது கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுவதாக  கூறினார்.  

‘பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு கடவுள் வசிப்பார் என்றும் சொல்வது உண்டு.   ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் பல்வேறு சமூக தீமைகள் தலைதூக்கியுள்ளன. குழந்தை திருமணம், சதி மற்றும் வரதட்சணை, விதவை வாழ்க்கை போன்ற சமூக தீமைகள் உருவெடுத்துள்ளன.  இதுபோன்ற சமூக தீமைகள் நம் நாட்டின் கலாச்சாரம் மீது படிந்த கறைகளாகும்.

வியாழன், 23 ஜூன், 2022

விவசாயத்தில்உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும்.- மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்


 விவசாயத்தில்உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் சோலன் நகரில் ஃபிக்கி சார்பில் நடந்த விவசாயத்தில் ரசயானங்கள் பயன்பாடு குறித்து 11 வது மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு  உழைப்புக்கேற்ற ஊதியம்  என்பது முக்கியம் என்று கூறிய அவர்,  உற்பத்தி அதிகரிப்பதும் முக்கிய தேவையாக உள்ளது என்று கூறினார். மேலும் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிப்பதில் நாடு முக்கிய பணியை செய்துகொண்டிருப்பதாகவும், வேளாண்மையில் விவசாயிகளுக்கு வரும் லாபத்தை அதிகரிப்பது முக்கியமானது என்றும், அறுவடைக்கு பிந்தைய நஷ்டத்தை குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  இதற்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாகவும், அதேநேரத்தில், விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லாபம் தரும் பயிர்களை விளைவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

செவ்வாய், 21 ஜூன், 2022

யோகா சிறந்த விலையில்லா மருந்து என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

 


சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி காந்தித்திடலில் நடைபெற்ற பெருந்திரள் யோகா பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது அதிகரித்து வரும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கையில் யோகா நமது மனதை ஒருமுகப்படுத்துகிறது.  யோகா உடற்பயிற்சியாகவும் மருந்தாகவும் மன அமைதி தருவதாகவும் உள்ளது என்றார்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையுடன் (ஏஎஸ்ஐ) கலாச்சார அமைச்சகம் இணைந்து இன்று 'யோகா பெருவிழா' நிகழ்ச்சியை புது தில்லியில் உள்ள புராண கிலாவில் ஏற்பாடு செய்திருந்தது.

2022 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையுடன் (ஏஎஸ்ஐ) கலாச்சார அமைச்சகம் இணைந்து இன்று 'யோகா பெருவிழா' நிகழ்ச்சியை புது தில்லியில் உள்ள புராண கிலாவில் ஏற்பாடு செய்திருந்தது.  இந்நிகழ்ச்சியானது கலாச்சார நலவாழ்வின் நிரந்தர மதிப்பை மக்களிடையே விதைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை  இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்,  மத்திய கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்,  இந்நிகழ்வில் கலாசார அமைச்சகத்தின்  அதிகாரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொன்மை வாய்ந்த அறிவியலான யோகா உலகத்திற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு - குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு


 மத்திய சுற்றுலா அமைச்சகம் செகந்திராபாத் அணிவகுப்பு மரியாதைக்கு ஏற்பாடு செய்திருந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நூற்றுக்கணக்கானோருடன் கலந்து கொண்டார். யோகா பயிற்சி மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே உரையாற்றினார்.

தொன்மை வாய்ந்த அறிவியலான யோகா உலகத்திற்கு இந்தியா வழங்கிய விலைமதிப்பில்லாத பரிசு என்று கூறிய திரு நாயுடு,  ஒவ்வொருவரும் யோகாவை தங்களது அன்றாட பயிற்சியாக மேற்கொண்டு அதன் பலன்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  நல்வாழ்வுக்கு தீர்வாக யோகா குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

திங்கள், 20 ஜூன், 2022

மாறாத அவலம்: வட தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம் தேவை! - DR.S.ராமதாஸ்


மாறாத அவலம்: வட தமிழ்நாடு கல்வி

மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம் தேவை! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.- தொல். திருமாவளவன்

 மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் :

தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை வரவேற்று  வழிமொழிகிறோம்!  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமரை வலியுறுத்தியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று வழிமொழிகிறோம். இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக சார்பில் இந்தியப் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஞாயிறு, 19 ஜூன், 2022

மேகேதாட்டு அணை குறித்து விவாதிப்போம் என்று, காவிரிப் படுகைக்கு வந்து எஸ்.கே.ஹல்தர் கூறி இருப்பது கடும் கண்டத்திற்கு உரியது. - வைகோ

 எஸ்.கே. ஹல்தர், காவிரி ஆணையத்தின் தலைவரா?

கர்நாடக அரசின் பிரதிநிதியா? - வைகோ கேள்வி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்; அக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. மேகேதாட்டு அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழநாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்கும்படி வலியுறுத்த வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 மேகதாது சிக்கல்: காவிரி ஆணையக்

கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பது குறித்து முறையிடுவதற்காக மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான சட்டமன்றக் கட்சித் தலைவர்கள்  தில்லி சென்று சந்திக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதுமட்டுமே போதுமானதல்ல என்பதால், சட்டப்போராட்டத்தையும் தீவிரப்படுத்த வேண்டும்.

முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக அல்ல, அவர்களை ஊக்கப்படுத்தவும் மேலும் பல பணிகளை செய்ய உற்சாகப்படுத்தவும்தான்!

 "முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக அல்ல, அவர்களை ஊக்கப்படுத்தவும் மேலும் பல பணிகளை செய்ய உற்சாகப்படுத்தவும்தான்!"

- திமுகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்று (17-06-2022) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில்  திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கழக முன்னோடிகள் 500 பேருக்குப் பொற்கிழி வழங்கி, தலைமையுரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

அக்னி வீரர்கள், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் சேர 10% காலி இடங்களை அவர்களுக்கு ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


பிரதமர் திரு நரேந்திர மோடியால் வழிநடத்தப்படும் இந்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களை நிறைவு செய்த அக்னி வீரர்கள், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் சேர 10% காலி இடங்களை அவர்களுக்கு ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தொடர் சுட்டுரைச் செய்திகளின் வாயிலாக உள்துறை அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

மாற்றும் அக்னிபத் திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, இந்திய ஆயுதப்படைகளின் சுயவிவரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியாகும்.- திரு சர்பானந்தா சோனோவால்


 துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இந்திய கடற்படையில் பணிபுரிந்த பிறகு, வணிகக் கடற்படையின் பல்வேறு பொறுப்புகளில் அக்னிவீரர்களை சுமூகமாக மாற்றுவதற்கு ஆறு கவர்ச்சிகரமான சேவை வழிகளை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அக்னிவீரர்களுக்கு தேவையான பயிற்சியைப் பெறவும், சிறந்த கடற்படை அனுபவம் மற்றும் தொழில்முறை சான்றிதழுடன் உலகம் முழுவதும் உள்ள ஊதியம் பெறும் வணிகக் கடற்படையில் சேர உதவும். மும்பையில் உள்ள துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைப்பான கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் இந்த விதிகளை இன்று அறிவித்தது.

மகப்பேறு நன்மைச் சட்டம், 1961-ல் இறுதி சட்ட மறுஆய்வு ஆலோசனைக்கு தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு.


 

மகப்பேறு நன்மைச் சட்டம், 1961-ல் இறுதி சட்ட மறுஆய்வு மற்றும்பெண்களை பாதிக்கும் சட்டத்தை மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு செய்வதுடன்,  இச்சட்டங்களில் குறைபாடு ஏதுமிருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான திருத்தங்களை பரிந்துரைப்பது குறித்த ஆலோசனைக்கு  தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

சனி, 18 ஜூன், 2022

இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளன.- திரு.பியூஸ் கோயல்


 பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் – தொழில்துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.வால்டிஸ் தோம்ப்ரோவ்ஸ்கி ஆகியோர்,  இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முறைப்படி மீண்டும் தொடங்கியுள்ளனர்.  இது தவிர, முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் புவிசார் குறியீடுகளுக்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளது. 

தமது அன்னை, 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஓர் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவை எழுதியுள்ளார்.


 தமது அன்னை, 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஓர் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவை எழுதியுள்ளார். தமது குழந்தைப் பருவத்தில் தாயுடன் செலவிட்ட சில சிறப்பு தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். தாம் வளர்கையில், தமது அன்னை செய்த ஏராளமான தியாகங்களை நினைத்துப் பார்த்த அவர்,  தமது மனம், ஆளுகை மற்றும் தன்னம்பிக்கையை வடிவமைத்த  அன்னையின் ஏராளமான குணங்களைக் குறிப்பிட்டார்.

“எனது தாய் திருமதி ஹீராபா மோடி, தமது 100-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது நூற்றாண்டு பிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது”, 

வெள்ளி, 17 ஜூன், 2022

சர்வதேச யோகா தினத்தன்று 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய உள்ளனர். - மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்


பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கடந்த 2014 டிசம்பர் 21 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது, அன்று முதல் 8 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம் என்றார். சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், 75 நாட்களாக பல்வேறு துறைகளில் யோகா தின கவுண்டவுன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும், அதேபோல் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.

அக்னிபத் திட்டத்தில் வயது தளர்வு அறிவித்திருப்பது இளைஞர்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. - திரு.ராஜ்நாத் சிங்


 இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இரண்டுநாள் பயணமாக ஜம்மு&காஷ்மீர் சென்றுள்ள அவர், கடந்த இரண்டு ஆண்டுகள், கொரோனா காரணமாக ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2022-ம் ஆண்டில் அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மேகதாது அணைக்கு அனுமதி தரப்பட்டால் தமிழக அரசின் மாற்றுத் திட்டம் என்ன? - DR.அன்புமணி ராமதாஸ்

 மேகதாது அணைக்கு அனுமதி தரப்பட்டால்

தமிழக அரசின் மாற்றுத் திட்டம் என்ன? - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் தெரிவித்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், நாளை நடைபெற  உள்ள கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதிக்கும் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதியாக இருப்பது கவலையளிக்கிறது.  மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான சூழ்ச்சியாகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது.

சிறந்த தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கட்டுமான செலவை குறைத்தல் ஆகியவையே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.- திரு.நிதின் கட்கரி


 கட்டமைப்பு மேம்பாட்டில் ‘தரம்’ குறித்து கவனம் செலுத்த, புதிய சிந்தனைகள், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான புதுமை கண்டுபிடிப்பு வங்கி ஒன்றை அமைக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பின் 22-வது மத்திய கால நிர்வாகக் குழு கூட்டத்தில், காணொலி வாயிலாகப் பேசிய அவர், இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பிடமிருந்து புதிய முன்முயற்சிகளை அரசு எதிர்பார்ப்பதாகவும், புதிய கண்டுபிடிப்புகளில் அனைத்து பொறியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.  ஐஐடி-க்கள் மற்றும் உலகிலுள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியுடன், உலகத்தரம் வாய்ந்த, அதிநவீன பரிசோதனைக் கூடம் ஒன்றை இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்திருப்பதற்கு அமித்ஷா வரவேற்பு


 அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதில், இரண்டு ஆண்டுகள் தளர்வு அளித்து, 21-லிருந்து 23-ஆக உயர்த்தி பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித்ஷா நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கான முன்னுரிமைப் பிரச்சினைகளை உலகிற்கு முன்வைப்பதில் இந்தியக் குழு 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.-திரு பியூஷ் கோயல்


 நமது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான வலுவான உலகளாவிய பிரச்சாரம்  ஒரு பக்கம் இருந்தபோதிலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு உலக வர்த்தக அமைப்பில் இந்தியா சாதகமான முடிவைப் பெற முடிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு,பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு ஜெனிவாவில் இன்று நிறைவு பெற்றது.  இந்த மாநாடு "முடிவு சார்ந்த" வெற்றியைப் பெற்றுள்ளதாக கூறிய திரு கோயல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கான முன்னுரிமைப் பிரச்சினைகளை உலகிற்கு முன்வைப்பதில் இந்தியக் குழு 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

வியாழன், 16 ஜூன், 2022

பறவைகள் கண்டறிதல் மற்றும் அடிப்படை பறவையியல்” குறித்த நான்காவது தொகுப்பு பயிற்சி நிறைவடைந்தது.


 பிரதமரின் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் படி இந்தியாவின் இளைஞர்கள் ஆதாயம் தரும் வேலைவாய்ப்பை பெறும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் வன மேம்பாட்டு திறனுக்கான முன்முயற்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

கருத்துக்கணிப்புகளுக்குத் தடை: தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 கருத்துக்கணிப்புகளுக்குத் தடை: தேர்தல்

சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

பொதுத்தேர்தல்களில் ஒருவர் ஒரு தொகுதிக்கும் கூடுதலாக போட்டியிடக் கூடாது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம்  வலியுறுத்தியுள்ளது. சமவாய்ப்புடன் தேர்தலை நடத்துவதற்கான இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

சனாதனப் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.- தொல். திருமாவளவன்


 பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும்,  சமூக வலைத்தளத்திலும் நபிகள்  நாயகமான முகமது நபி அவர்களை  அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன்,  அரபு நாடுகளில் வேலை செய்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமான பாஜக நிர்வாகிகளை இந்திய அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

கத்தாரில் வசிக்கும் 7.80 லட்சம் இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கு இடையேயான பாலமாக திகழ்கிறார்கள்.- திரு.வெங்கையா நாயுடு


கத்தாரில் வசிக்கும் 7.80 லட்சம்  இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கு இடையேயான பாலமாக திகழ்கிறார்கள். இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. கொவிட்-19 சவாலுக்கு இடையேயும் கடந்த ஆண்டு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இருநாட்டு வர்த்தகத்தை நாம் பதிவு செய்து சாதனை படைத்தோம். இந்தியா, கத்தாரின் 3-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. மார்ச் 2020 முதல் இந்தியாவில் கத்தாரின் அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. கத்தார் பல்கலைக்கழகத்தில் இந்திய அமர்வை நிறுவவும், விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தில் ஒத்துழைப்பை அளிக்கவும் நேற்று நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். இரு நாடுகளின் புதிய கண்டுபிடிப்புகள் சூழலியலை இணைப்பதற்காக ஓர் புதிய நிறுவனங்களின் பாலத்தை அறிமுகப்படுத்தினோம்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்க 130கோடி இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.

 “தற்சார்பு இந்தியாவை உருவாக்க 130கோடி இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.  தற்சார்புக்கான எங்களது(அரசின்) ஊக்குவிப்பு நடவடிக்கைகள்,   உலகம் வளம் பெறுவதற்கான பங்களிப்பால் உருவானது. 

“எங்களது அரசு, ஒவ்வொரு இந்தியரின் நலனையும் பாதுகாக்கும் அரசாகும்.  நாங்கள், மக்கள் நலன் சார்ந்த மற்றும் மனிதநேய அணுகுமுறையுடன் இயக்கப்படுகிறோம்.

புதன், 15 ஜூன், 2022

5ஜி அலைக்கற்றையின் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி


 பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக வெற்றி பெற்ற ஏலதாரர்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான ஏலத்தை நடத்துவது குறித்த தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட முன்னோடி திட்டங்களின் வாயிலாக டிஜிட்டல் இணைப்பு என்பது அரசின் கொள்கை முயற்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை.- குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு


 மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உலக அமைதி மிகவும் முக்கியமானது என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, “நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை” என்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவனத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடிய திரு.நாயுடு, இந்தியர்கள் தங்களது கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதுடன், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்று கூறினார்.  உலகமே ஒரே குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்கீழ் 'குறைந்தபட்ச ஆட்சி, அதிகபட்ச நிர்வாகம்' என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். - திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா


 மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா, IoTechWorld Avigation Pvt Ltd-க்கு, ட்ரோன் விதிகள் 2021-ன்கீழ், முதல் தகுதிச் சான்றிதழை வழங்கினார். 2017-ம் ஆண்டில் குருகிராமில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில், விவசாயத்துறைக்கு உதவி செய்யும் ட்ரோன்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.

IoTechWorld சான்றிதழுக்கான விண்ணப்பத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இணையதளத்தில் 2022 மே 11-ம் தேதி சமர்ப்பித்த நிலையில், 34 நாட்களுக்குள் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  ட்ரோன் விதிகள் 2021, இந்திய தர கவுன்சில் அல்லது சான்றிதழ் வழங்கும் அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்க 60 நாட்களும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு 15 நாட்களும் என மொத்தம் 75 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதால், 60 நாட்களில் தகுதிச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படைகளில் இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான ‘அக்னிபத்’ திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்.

 


ஆயுதப்படைகளில் இந்திய இளைஞர்களை பணியமர்த்தும் கவர்ச்சிகரமான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. அக்னிபத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.  தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற அக்னிபத் அனுமதிக்கும்.   

ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார்.


 இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பிசிஏ மைதானத்தில் வரும் 16. 17 ஆகிய தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கையாக மாநாடு நடைபெறும். 

     15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில், மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள்  உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் அதிவேக நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படும். இந்தியா ஒரே குழு என்ற உணர்வுடன் நடைபெறும் மாநாடு, நீடித்த உயர் வளர்ச்சி, வேலைகள் உருவாக்கம், கல்வி, எளிதாக வாழுதல், வேளாண்மையில் தற்சார்பு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான தளத்தை உருவாக்கும்.  பொதுவான வளர்ச்சியை செயல்படுத்துதல், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான திட்டம் ஆகியவற்றை இந்த மாநாடு மதிப்பீடு செய்யும். 

கோவில்கள் என்பவை இந்து சமயத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நிலையில், இவை புனிதமான இடங்களாகும்.- ராம்நாத் கோவிந்த்


 கோவில்கள் என்பவை இந்து சமயத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நிலையில், இவை புனிதமான இடங்களாகும். இவற்றின் மெய்சிலிர்ப்பாக அல்லது சக்தியாக அல்லது ஆழமான பக்தி உணர்வாக தெய்வநிலை இருப்பதாக பக்தர்கள் உணர்கிறார்கள். இது போன்ற இடங்களுக்கு வரும்போது ஒருவர் இந்த உலகத்தையும், அதன் பின்னால் உள்ள சப்தத்தையும் விட்டுவிட்டு அமைதி உணர்வில் உறைகிறார்கள்.  மற்றொரு நிலையில், வழிபாட்டிடம் என்பதைவிட, உயர்ந்ததாக கோவில்கள் கருதப்படுகின்றன. இவை சங்கம இடம் போன்று இருக்கின்றன. அல்லது கலை, கட்டடக்கலை, மொழி, ஞான பாரம்பரியங்கள், ஆகியவற்றின் புனித சங்கமமாகவும்  இருக்கின்றன.

அதிகரிக்கும் காலியிடங்கள்: உடனடியாக 50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

 அதிகரிக்கும் காலியிடங்கள்: உடனடியாக

50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

செவ்வாய், 14 ஜூன், 2022

பெங்களூரு தேசிய ராணுவப் பள்ளியின் பவள விழாக் கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை


 பெங்களூரு தேசிய ராணுவப்பள்ளியின் பவள விழாவை கொண்டாடுவதற்கான இந்த சிறப்புமிகு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இங்கு பயிற்சி பெறும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள்,  முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன். 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி, தற்போது நாட்டில் உள்ள மிகச்சிறந்த உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 'கிறித்தவர் ஒருவரை' நிறுத்த வேண்டும்! விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!


 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 'கிறித்தவர் ஒருவரை'  நிறுத்த வேண்டும்! விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! 

எதிர்வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறித்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

திங்கள், 13 ஜூன், 2022

தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகம், ராணுவம் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம்.-திரு. ராஜ்நாத் சிங்


தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், எப்போதும் உருவாகி வரும் உலகளாவிய சூழ்நிலைகளில் இருந்து எழக்கூடிய எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் சிவில் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளின் அதிக ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

 ஜூன் 13,2022 ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) 28வது கூட்டு சிவில்-ராணுவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்களிடம் அவர் உரையாற்றினார். பல இராணுவத் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பின் பொதுவான அம்சத்துடன் சிவிலியன் பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்பு என்ற கருத்து மிகவும் விரிவானதாக மாறியுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

"வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0” நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்


 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  மூத்த அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ்  மூலம் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார். நிகழ்ச்சி “வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0” (HarGharDastak 2.0) ஹர் கர் தஸ்தக் அபியான் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார்.

“கோவிட் இன்னும் தீரவில்லை. சில மாநிலங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில், தொற்று பரவாமல் தடுக்க முகமூடி அணிவது மற்றும் பாதுகாப்பான இடைவெளியை பராமரிப்பது போன்ற கோவிட் பொருத்தமான நடைமுறைகளை (CAB) ஒருவர் மறந்துவிடக் கூடாது.

ஆன்லைன் சூதாட்டம் நடக்கும் தளங்களில் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்குமாறு, அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான இணையதளங்களில் விளம்பரம் செய்வதை தவிர்க்குமாறு அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இன்று அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களில் அதிக அளவில் விளம்பரங்கள் வருவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த அறிவுரையை அமைச்சகம் வழங்கியுள்ளது.

புத்தபிரானின் 4 புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள், 11 நாள் கண்காட்சியில் வைப்பதற்காக இன்று மங்கோலியா கொண்டு செல்லப்பட்டது.


 புத்தபிரானின் 4 புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள், 11 நாள் கண்காட்சியில் வைப்பதற்காக இன்று மங்கோலியா கொண்டு செல்லப்பட்டன. மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தலைமையிலான 25 உறுப்பினர்கள் குழுவினர் இவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த புனிதச்சின்னங்களை, உலான்பாட்டர் சர்வதேச விமான நிலையத்தில் மங்கோலியாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் திருமதி சோ நாமின், இந்தியா- மங்கோலியா நட்புறவு குழுவின் தலைவர் திருமதி சரண்சிமெக், மங்கோலிய அதிபரின் ஆலோசகர் திரு கம்பா நோமன் கான் மற்றும் புத்த மத துறவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பாரம்பரிய முறைப்படி பெற்றுக்கொண்டனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் செய்துகொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம்

தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றி வரும் 219 ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. 

சனி, 11 ஜூன், 2022

பா.ஜ.க.வின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தும் பணியை காங்கிரஸ் தொடர்ந்து செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.- கே.எஸ்.அழகிரி

 சுதந்திரப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள மனைவி கமலா நேருவின் நகைகளை அடமானம் வைத்து நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை நேரு நடத்தினார். இந்த செய்தித்தாளுக்கு பெரோஸ் காந்தி ஆசிரியராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸின் குரலாக மாறிய நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை அசோசியேட்டடு ஜர்னல் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டது. இது இந்தியில் நவ்ஜீவன் மற்றும் உருது மொழியில் குவாமி அவாஜ் ஆகிய செய்தித்தாள்களையும் வெளியிட்டது.

வெள்ளி, 10 ஜூன், 2022

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கினார்.


 வியட்நாம் நாட்டின் ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு ஜூன் 9-ஆம் தேதி சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கினார். இந்திய அரசு, வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் படகுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், இதர 7 படகுகள் ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்பட்டன.

வியாழன், 9 ஜூன், 2022

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் என்ற பெயர்ப்பலகைகளை வேண்டுமானால் மாட்டலாமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. - DR. அன்புமணி ராமதாஸ்

 

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளா?

கட்டமைப்பு இல்லை, யாருக்கும் பயன் தராது! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அவை அரசு பள்ளிகளில் இருந்து அங்கன்வாடிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்திருக்கிறார். அமைச்சரின் இந்த விளக்கம் உண்மை நிலையை மறைக்கும் செயல்; இது யாரையும் திருப்திப்படுத்தாது.

புதன், 8 ஜூன், 2022

உலக அரங்கில் நம் நாட்டின் மத நல்லிணக்கம் விமர்சிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பது நமக்குப் பெருமை தராது! - கி.வீரமணி

 மதவாத அரசியல் முற்றிலும் மனிதநேயத்திற்கு விரோதமானது! 

உலக அரங்கில் நம் நாட்டின் மத நல்லிணக்கம் விமர்சிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பது நமக்குப் பெருமை தராது! 

பல வழிகளிலும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்; அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டைப் பார்த்துப் புரிந்துகொள்ளட்டும்!!

கடந்த 2014 முதல் இன்றுவரை - இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைபற்றிப் பேசிவரும் நாளில், உலகின் 58 நாடுகளைக் கொண்ட இஸ்லாமியக் கூட்டமைப்பு (OIC) நம் நாட்டோடு மிக நட்புறவோடு உள்ள பல வளைகுடா நாடுகளும், இந்தோனேஷியா போன்ற நாடுகளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் வெறுப்புப் பிரச்சாரத்தினைக் கண்டு தங்களது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதுடன், நம் நாட்டுப் பொருளாதாரத்திற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதன் விளைவுகள் சற்றும் எதிர்பார்க்காத விளைவுகளாகி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்து இதுவரை கண்டுகொள்ளாமல், கடும் மறுப்பை அக்கட்சியின் தலைவரோ, பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பிலிருப்பவர்களோ கூறாது இருந்ததின் விளைவுதான் இந்த பல நாடுகளின் கண்டனக் கணைகள்!

தேசிய வான் விளையாட்டுகள் கொள்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா வெளியிட்டார்.


 தேசிய வான் விளையாட்டுகள் கொள்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா இன்று  வெளியிட்டார்.  2030க்குள் பாதுகாப்பான, குறைந்த செலவிலான, எளிதில் பெறக்கூடிய, ரசிக்கத்தக்க, நீடிக்கவல்ல, வான்விளையாட்டுகள் சூழலை இந்தியாவில் உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

செவ்வாய், 7 ஜூன், 2022

இந்திய வம்சா வழியினரின் வெற்றி என்பது இந்தியா மற்றும் இந்தியர்கள் பற்றிய உலகின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு


 காபோன், செனகல், கத்தார் நாடுகளில் வெற்றிகரமான 9 நாள் பயணத்தை நிறைவு செய்த குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று மாலை இந்தியா திரும்பினார். காபோன், செனகல் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த உயர்நிலை தலைவரின் முதலாவது பயணம் இதுவாகும். அதேபோல் இந்திய குடியரசு துணைத்தலைவர் கத்தார் நாட்டிற்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும். இந்த நாடுகளின் தலைநகரங்களான லிப்ரேவில்லே, டாக்கர், தோகா ஆகியவற்றில் திரு நாயுடுவை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளில்  அவர் அந்நாடுகளின் வணிகத்துறையினர் மற்றும் இந்திய சமூகத்தினருடன்  கலந்துரையாடினார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால் செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.- DR . அன்புமணி ராமதாஸ்

 ஆன்லைன் சூதாட்டத்தடை: அவசர சட்டம்

பிறப்பிக்கக் கோரி ஜூன் 10 போராட்டம்! - DR . அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வரும் நிலையில்,  அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால்  செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

சென்னை ஐ.ஐ.டி.யில் இப்போது நிரப்பப்படாத 25 பணியிடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பின்னடைவு பணியிடங்களும் அடையாளம் காணப்பட வேண்டும்.- DR.S.ராமதாஸ்



 சென்னை ஐஐடி: பின்னடைவு பணியிடங்களை

நிரப்புவதிலும் சமூகநீதியை மறுப்பதா? - DR.S.ராமதாஸ்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள 49 உதவிப் பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ஆள்தேர்விலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் எத்தனை முறை எச்சரித்தாலும் கூட இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐ.ஐ.டி நிர்வாகங்கள் மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியா மண்ணைப் பாதுகாப்பதற்கான ஐந்து அம்சத் திட்டத்தைக் கொண்டுள்ளது. - பிரதமர் திரு.நரேந்திர மோடி


 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் கூட்டத்தில் திரண்டிருந்தவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தார். 'மண்ணைக் காப்போம்' இயக்கத்தைப் பாராட்டிய பிரதமர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது, நாடு  புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய இயக்கங்கள் புதிய முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட  முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கோணத்தில் இருப்பதாக அவர் திருப்தி தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம்,  கழிவுகளிலிருந்து செல்வம் தொடர்பான திட்டம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகம் குறைப்பு, ஒரு சூரியன் ஒரு பூமி, எத்தனால் கலக்கும் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் பல பரிமாண முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகள் என்று  அவர் சுட்டிக்காட்டினார். 

திங்கள், 6 ஜூன், 2022

உத்தரப்பிரதேச சட்டமன்ற இருஅவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்


லக்னோவில் உத்தரப்பிரதேச சட்டமன்ற இருஅவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று (ஜூன் 6, 2022) உரையாற்றினார்.

 இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முக தன்மை அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகின்றன. இந்த மாநிலத்தின் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகவும் நல்ல உதாரணமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.