சனி, 18 ஜூலை, 2020

மக்களுக்காக - மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டை நடத்துவது எப்படி நீதிமன்ற அவதிப்பு ஆகும். - ஆர்.எஸ்.பாரதி MP


"பொதுமக்களின் நலனுக்காக திமுக நடத்தும் போராட்டம் எவ்விதத்திலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது" -  திரு. ஆர்.எஸ்.பாரதி MP அவர்கள் அறிக்கை.

‘மின்கட்டணத்தை குறைக்க கோரி கருப்புக் கொடி போராட்டம் என்றால் நீதிமன்ற அவமதிப்பாக இருக்கலாம்’ என அமைச்சர் பாண்டியராஜன் நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தையும்,  நீதிமன்றத்தையும் எந்நேரத்திலும் - எக்காலத்திலும் மதித்து நடக்கும் இயக்கம் தி.மு.க. என்பதையும்;  தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையும் அறியாத அமைச்சர் பாண்டியராஜன் ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக மாவட்டச் செயலாளர் - எம்.எல்.ஏ., - எம்.பி.க்கள் கூட்டத்தில் ‘‘மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின்கட்டணச்  சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக “செய்திக்குறிப்பு" ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலை கொள்ளாத கருணையற்ற போக்காகும்.

  ஆகவே, அ.தி.மு.க. அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ரீடிங் எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு - ஊரடங்கு கால மின்கட்டணத்தை  குறைக்கக் கோரியும் - குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை"" கழிக்க வலியுறுத்தியும்,  அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்’’ என்பதையும்;
மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களைப் போல கொரோனா கால மின் கட்டண சலுகைகளை தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்பதையும் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். இது எப்படி நீதிமன்ற அவதிப்பு ஆகும்.

மக்களுக்காக - மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டை நடத்துவது எப்படி நீதிமன்ற அவதிப்பு ஆகும்.

அதோடு, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், ‘10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு ரத்து’  போன்ற மக்களுக்கான நன்மைகளை செயல்படுத்திட, தி.மு.கழகம் நீதிமன்றத்தை நாடி, அதன் மூலம் எச்சரிக்கப்பட்டு, அதன் பின்பு ஆளும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியதிலிருந்தே, நீதிமன்றத்தை தி.மு.க. எப்படி மதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அத்துடன்,  அமைச்சர் பாண்டியராஜனின் கட்சியின் தலைவி முதல் அக்கட்சியினரின் ஊழல்களையும் - தில்லுமுல்லுகளையும், தி.மு.கழகம் நீதிமன்றத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. இதனையெல்லாம் அறிந்து கொண்டு அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்திட வேண்டுமென்பதோடு,
 மக்களுக்காக - மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டை நடத்துவது எந்த வகையிலும் நீதிமன்ற அவதிப்பு ஆகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக