வியாழன், 23 ஜூலை, 2020

அமைச்சரும் அரசும் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க வேண்டும் - சு.வெங்கடேசன் MP


"நான் பீதி கிளப்புவதாகச் சொன்னீர்களே... 
இப்போது நிலை என்ன அமைச்சரே?"  - சு.வெங்கடேசன் MP

"ஜூன் 26ம் தேதி சில புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மதுரைக்கு முதல்வர் உடனடியாக உதவ வேண்டும்" என்ற அறிக்கையொன்றினை வெளியிட்டேன். அதற்கு மறுநாள் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ”எம்.பி., முதல்வருக்குக் கடிதம் எழுதுவதாகச் சொல்லி, தேவையில்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்புகிறார்” என்று கூறினார்.

"மதுரையில் தொற்று பரவும் வேகம் 7.9% ஆக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஜூலை 21ம் தேதி மதுரையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,883 ஆக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தேன். இதனைத்தான் அமைச்சர் பீதியை கிளப்புவதாகச் சொன்னார். ஆனால், (ஜூலை 21) மதுரையில் 8,517 தொற்றாளர்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

அமைச்சரும் அரசும் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதும் உண்மையான நிலைமையை எப்படியாவது உங்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான். அதற்குத்தான் தொடர்ந்து முயல்கிறோம், முயல்கிறோம் முயன்று கொண்டே இருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக